சோறுபோட்டு மாளவில்லை.. சிறைகளிலுள்ள 407 இந்தியர்களை தாயகம் அனுப்புகிறது இங்கிலாந்து
லண்டன்: இங்கிலாந்து சிறையில் உள்ள கைதிகளை இந்தியாவுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ள நிலையில் இதற்கான ஒப்பந்தம்போடப்பட உள்ளது.
இங்கிலாந்தில் உள்ள சிறைகளில் வெளிநாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்து 127 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் 2,233 பேர் உள்ளனர்.

அதிகபட்சமாக பாகிஸ்தானை சேர்ந்த கைதிகள் 509 பேர் அங்கு சிறையில் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவை சேர்ந்த 407 கைதிகள் இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளை பராமரிப்பதற்கும், சாப்பாடு கொடுப்பதற்கும் ஆகும் செலவு அதிகரித்து வருவதால், வெளிநாடுகளை சேர்ந்த கைதிகளை அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப இங்கிலாந்து அரசு முடிவு செய்தது.
அதன்படி, ஜமைக்கா நாட்டை சேர்ந்த 300 கைதிகளை அந்தநாட்டிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிறையில் உள்ள இந்திய கைதிகளை இந்தியா அனுப்ப இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உத்தரவை அடுத்து, அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடத்தப்பட்டு வருகிறது. கைதிகளை அனுப்புவது குறித்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், அங்குள்ள இந்திய கைதிகள் தாயகம் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
நான்கு வருடங்களுக்கும், அதற்கு மேல் தண்டனை பெற்ற கைதிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications