உலக கோப்பை கிரிக்கெட் 'நாயகன்' 6 வருடத்துக்கு பிறகு சிறையில் இருந்து ரிலீஸ்!
லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உலக கோப்பை நாயகன் கிறிஸ் லீவிஸ், 6 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு இன்று விடுதலையடைந்தார்.
1992ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த உலக கோப்பையின் அரையிறுதியில், தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதின. 13 பந்துகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 22 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை பெய்தது. எனவே டக்வொர்த் லீவிஸ் விதிமுறை அமலுக்கு வந்து ஒரு பந்தில் 22 ரன்கள் எடுக்க வேண்டும் என்று விதிமுறை மாற்றப்பட்டது. பெரும் சர்ச்சைக்குறிய இந்த விதிமுறையால், தென் ஆப்பிரிக்கா தோற்றது.

ஆனால், இங்கிலாந்துக்கோ அது கொண்டாட்டத்திற்குறிய வெற்றி. அந்த கடைசி பந்தை வீசிய கிறிஸ் லீவிஸ் கடவுளின் தூதராகவே பார்க்கப்பட்டார். உலக கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் இங்கிலாந்து தோற்றபோதிலும், கிறிஸ் லீவிஸ், இங்கிலாந்தின் நாயகனாக இருந்தார்.
இந்நிலையில், கோகைன் போதைப் பொருளை இங்கிலாந்துக்குள் கடத்தியதாக 6 ஆண்டு சிறை தண்டனைக்குள்ளானார் கிறிஸ் லீவிஸ். அவரது சிறை தண்டனை இன்றோடு முடிவடைந்து ரிலீஸ் ஆகியுள்ளார். 47 வயதான லீவிஸ், 32 டெஸ்ட், 53 ஒருநாள் போட்டிகளில் ஆடியவர்.












Click it and Unblock the Notifications