வாட்டும் கோடை வெயில்.. வீதியில் கசமுசா செய்து வாங்கிக் கட்டும் ஐரோப்பியர்கள்
லண்டன்: என்னே இந்த ஐரோப்பியர்களுக்கு வந்த சோதனை என்றுதான் இந்த சம்பவத்தை பார்த்ததும் நினைக்க தோன்றுகிறது. சிலுசிலுவென வாழ்ந்தவர்கள் இப்படி தனலில் கொதித்தால் பரிதாபம் வரத்தானே செய்யும். ஆனால், இப்படி பப்ளிக் இடத்தை நாஸ்தி செய்யும் அளவுக்கு அவர்களை இந்த வெயில் பாடாய் படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
ஐரோப்பிய நாடுகளில் தற்போது, வெப்பம் வரலாறு காணாத அளவுக்கு வறுத்தெடுக்கிறது. லண்டனில் அதிகபட்ச வெப்ப நிலை 33 டிகிரி செல்சியசை தாண்டியது. வீடுகளுக்குள் இப்போது ஹீட்டர் போடாமலே கொதிக்கிறது வெள்ளைக்காரர்களுக்கு.

வெப்பம் அதிகரித்ததும், உடல் வேட்கையும் அதிகரிக்கத்தான் செய்துவிட்டது. ஆனால் வெப்பத்தில், உடல் நெருக்கம் காட்ட கசகசவென வருகிறது அவர்களுக்கு. இதனால், ஜோடிகளை கூட்டிக்கொண்டு, திறந்த வெளிகளில் ஒதுங்கிவிடுகின்றனர்.
கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் மட்டும் 2 புகார்கள் இதுபோல வந்துள்ளன போலீசாருக்கு. ஒரு சம்பவம் பொது மக்கள் பூங்காவில் நடந்துள்ளது. 50 வயது மதிக்கத்தக்க பெண்ணும், 40 வயது மதிக்கத்தக்க ஆணும், பார்க்கில் பலானது செய்துகொண்டிருந்ததை பார்த்த பெண்மணி ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதேபோல பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த டெலிபோன் பூத்துக்குள்ளும், ஒரு ஜோடி கூத்தடித்துள்ளதாக போலீசாருக்கு புகார் வந்தது. இரு ஜோடிகளையும் போலீசார் அங்கிருந்து விரட்டி விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications