புலம்பெயர் தமிழர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்திய ஐரோப்பிய யூனியனின் அறிவிப்பு!
ஐரோப்பிய ஒன்றிய உயர்நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு நிம்மதியளித்துள்ளது.
லக்சம்பர்க்: இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஐரோப்பிய யூனியனின் உயர்நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்க உத்தரவு அமைந்துள்ளது.
இலங்கையில் நடந்த போர்க்காலங்களிலும், அதற்குப் பிறகான காலகட்டத்திலும் பலர் அயல்நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இருக்கும் பிரதான பிரச்னை என்னவென்றால் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஆதரவாக எந்த போராட்டத்தை கையில் எடுத்தாலும் அவர்கள் மீது விடுதலைப் புலிகள் என்ற முத்திரை குத்தப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது போராட்ட அமைப்பு தான், அது தீவிரவாத அமைப்பு அல்ல என்று சர்வதேச நீதிமன்றங்களில் புலம்பெயர்த் தமிழர்கள் வழக்கு தொடர்ந்து வாதிட்டு வருகின்றனர். எனினும் சர்வதேச நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று கூறி தடை விதித்ததால் தொடர்ந்து புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் போராட்டக் குரல் நசுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஐரோப்பிய யூனியனின் உயர்நீதிமன்றம் இன்று அளித்த இறுதித் தீர்ப்பில் விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இனியாவது தங்களின் போராட்டத்திற்கு ஐரோப்பிய நாடுகள் செவிசாய்க்கும் என்ற மகிழ்ச்சி அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் ஐரோப்பிய நாடுகளைப் போலவே புற நாடுகளும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications