புலம்பெயர் தமிழர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்திய ஐரோப்பிய யூனியனின் அறிவிப்பு!
ஐரோப்பிய ஒன்றிய உயர்நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு நிம்மதியளித்துள்ளது.
லக்சம்பர்க்: இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஐரோப்பிய யூனியனின் உயர்நீதிமன்றம் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்க உத்தரவு அமைந்துள்ளது.
இலங்கையில் நடந்த போர்க்காலங்களிலும், அதற்குப் பிறகான காலகட்டத்திலும் பலர் அயல்நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இருக்கும் பிரதான பிரச்னை என்னவென்றால் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஆதரவாக எந்த போராட்டத்தை கையில் எடுத்தாலும் அவர்கள் மீது விடுதலைப் புலிகள் என்ற முத்திரை குத்தப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது போராட்ட அமைப்பு தான், அது தீவிரவாத அமைப்பு அல்ல என்று சர்வதேச நீதிமன்றங்களில் புலம்பெயர்த் தமிழர்கள் வழக்கு தொடர்ந்து வாதிட்டு வருகின்றனர். எனினும் சர்வதேச நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று கூறி தடை விதித்ததால் தொடர்ந்து புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் போராட்டக் குரல் நசுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஐரோப்பிய யூனியனின் உயர்நீதிமன்றம் இன்று அளித்த இறுதித் தீர்ப்பில் விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இனியாவது தங்களின் போராட்டத்திற்கு ஐரோப்பிய நாடுகள் செவிசாய்க்கும் என்ற மகிழ்ச்சி அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் ஐரோப்பிய நாடுகளைப் போலவே புற நாடுகளும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications