எவரெஸ்ட் சிகரத்தையே நகர்த்திய நேபாள நிலநடுக்கம் ! 3 செ.மீ. நகர்ந்துள்ளதாக சீன கண்காணிப்பகம் தகவல் !
Subscribe to Oneindia Tamil
பீஜிங் : நேபாள நாட்டை கடந்த இரு மாதங்கள் தாக்கிய நிலநடுக்கத்தின் விளைவாக இமய மலையில் உள்ள எவரெஸ்ட் பகுதி 3 சென்டிமீட்டர் அளவுக்கு நகர்ந்து சென்றுள்ளதாக சீன கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் எவரெஸ்ட் 40 சென்டிமீட்டர் தூரத்துக்கு நகர்ந்து சென்றுள்ளதாகவும், கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதியில் இருந்து மே மாதம் 12 ஆம் தேதி வரை நேபாளத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் 3 சென்டிமீட்டர் அளவுக்கு மேலும் நகர்ந்துள்ளதாகவும் சீன கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது, 8.848 அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரம் நேபாள நிலநடுக்கத்தினால் சுமார் 2.5 சென்டிமீட்டர் அளவுக்கு உள்வாங்கிக் கொண்டதாக முன்னர் தெரிவித்திருந்த ஐரோப்பாவின் செண்ட்டினல்- 1A ரேடாரின் அறிவிப்புக்கு முற்றிலும் மாறான வகையில் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications