For Daily Alerts
Just In
கிர்கிஸ்தானில் சீன தூதரகத்தில் குண்டுவெடிப்பு... ஒருவர் பலி, 3 பேர் காயம்
பிஷ்கெக்: கிர்கிஸ்தானில் உள்ள சீன தூதரகம் முன்பு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலியானார், 3 பேர் காயம் அடைந்தனர்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் சீன தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஒருவர் தனது காரில் வெடிகுண்டுகளுடன் தூதரகத்திற்கு வந்துள்ளார்.
அவர் தூதரக நுழைவாயில் கேட்டை காரால் வேகமாக மோதினார். அப்போது காரில் இருந்த குண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதில் காரை ஓட்டி வந்தவர் பலியானார்.
இந்த சம்பவத்தில் தூதரகத்தில் பணிபுரியும் 2 பேர் மற்றும் ஒரு பெண் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
English summary
A car exploded after hitting the Chinese ambassy's gate in Bishkek, the capital of Kyrgyzstan, killing its driver besides injuring three persons.