For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிர்கிஸ்தானில் சீன தூதரகத்தில் குண்டுவெடிப்பு... ஒருவர் பலி, 3 பேர் காயம்

By Siva
Google Oneindia Tamil News

பிஷ்கெக்: கிர்கிஸ்தானில் உள்ள சீன தூதரகம் முன்பு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலியானார், 3 பேர் காயம் அடைந்தனர்.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் சீன தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஒருவர் தனது காரில் வெடிகுண்டுகளுடன் தூதரகத்திற்கு வந்துள்ளார்.

Explosion at Chinese embassy in Kyrgyzstan: One dead

அவர் தூதரக நுழைவாயில் கேட்டை காரால் வேகமாக மோதினார். அப்போது காரில் இருந்த குண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதில் காரை ஓட்டி வந்தவர் பலியானார்.

இந்த சம்பவத்தில் தூதரகத்தில் பணிபுரியும் 2 பேர் மற்றும் ஒரு பெண் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
A car exploded after hitting the Chinese ambassy's gate in Bishkek, the capital of Kyrgyzstan, killing its driver besides injuring three persons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X