மாயஜால சக்திகளுக்காக பொக்கிஷமான குழந்தைகளைக் கொன்ற தந்தை கைது!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மாயாஜால சக்திகளுக்காக பெற்ற குழந்தைகளையே கொலை செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியைச் சேர்ந்தவர் அலிநவாஸ் ஹஸ்ரி . வறுமையின் பிடியிலிருந்து தப்பிக்க மாயாஜாலம் மற்றும் மாந்திரீக சக்தி பெற விரும்பினார்.

Father Kills Five Children for Magic Powers

மாயாஜால சக்தி மூலம் இரும்பை தங்கமாகவும், வெள்ளியாகவும் மாற்றி அதிக பணம் சம்பாதித்து பணக்காரராக விரும்பினார். அதற்கு தனது குழந்தைகளை பலி கொடுக்க துணிந்தார்.

அதற்காக குழந்தைகளுக்கு விஷம் கலந்த உணவுடன் விருந்து வைக்கும்படி தனது மனைவியை வற்புறுத்தினார். அதற்கு மறுத்த அவர் தனது மூத்த மகளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

மீதம் 5 குழந்தைகள் வீட்டில் இருந்தனர். இதற்கிடையே அவர் மனைவி இல்லாத இந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார். தனது 5 குழந்தைகளையும் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

அவர்களின் பிணங்களை படுக்கை அறையில் கிடத்தி வைத்தார். கொலை செய்யப்பட்ட குழந்தைகள் 3 முதல் 13 வயது நிரம்பியவர்கள் ஆவர். தகவலறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பிணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி அலி நவாஸ் லஹ்ரி மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+