குடும்பத்தையே கொலை செய்த தந்தை... காரணத்தை பேஸ்புக்கில் விளக்கினார்!
மாண்ட்ரியல்: கனடாவின் மாண்ட்ரியல் நகரில் மகள், மனைவி, மற்றும் சகோதரியை கொலை செய்த நபர் இதற்கான காரணத்தை பேஸ்புக்கில் தெரிவித்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்,
முதலில் மகளை கொலை செய்த ராண்டி ஜேன்சன் என்ற அந்த நபா், இதற்கான காரணத்தை பேஸ்புக்கில் தொிவித்துள்ளாா். 19 வயதான தனது மகள் ஒற்றைத் தலைவலி காரணமாக அவளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாகவும், இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்பதால் அவளை கொலை செய்ததாகவும் தொிவித்துள்ளாா்.
மகளின் கொலைக்கான காரணத்தை பேஸ்புக்கில் ஏற்றிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, தனது மனைவி மற்றும் சகோதாியையும் கொலை செய்த தகவலையும் பதிவாக்கினாா்.
பாசமகள் கொலையானதைக் கேட்டு ஒரு தாயால் எப்படி உயிருடன் இருக்க முடியும். அதனால் தான் மனைவியையும், தனது சகோதாியையும் கொலை செய்தேன் என்று வாக்குமூலத்தை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளாா் அந்த "பாசமிகு" தந்தை
கோடிக்கணக்ககான மக்களை சென்றடையும் சமூக வலைதளத்தில் தொிவித்துள்ள கொலைகார தந்தையின் வாக்குமூலத்தை அறிந்த போலீசாா் ரேண்டியை கண்டுபிடித்து வான்கூவரில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் முன், வீட்டிற்குள் அரண் அமைத்து, தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாா்.
தீ வைத்து எாித்து ரேண்டி தற்கொலை செய்து கொண்ட வீட்டிற்குள் மேலும் உடல்கள் இருக்கலாம் என்று கனடா போலீசாா் சந்தேகிக்கின்றனா். ஆனால் வீடு தான் முற்றிலும் கருகி விட்டது.












Click it and Unblock the Notifications