வுஹான் நகர ஆய்வகத்தில் வைரஸ் உற்பத்தியாகிறது.. 40 வருடம் முன்பே சொன்ன மர்ம நாவல்.. பரபரப்பு
பீஜிங்: கொரோனா வைரஸ் தீ போல பரவியதில், சீனாவில் மட்டும், 1700க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். சீன நகரமான வுஹான் இந்த வைரஸின் மையமாக மாறி உள்ளது.
கொரோனா வைரஸ், இப்போது 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்பு வுஹான் நகரில் ஆரம்பித்த, வைரஸ் குறித்து, ஒரு புனைக்கதை, நாவல் புத்தகத்தில், தகவல் உள்ளது, உங்களுக்குத் தெரியுமா?
1981ஆம் ஆண்டில் டீன் கூன்ட்ஸ் எழுதிய த்ரில்லர் நாவலான தி ஐஸ் ஆஃப் டார்க்னஸ் (The Eyes of Darkness), வுஹான் -400 என்ற வைரஸைக் குறிப்பிட்டுள்ளது. நாவலின் கதைப்படி, அந்த வைரஸ் ஒரு ஆய்வகத்தில் ஆயுதமாக உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
|
மர்ம நாவல்
கொரோனா வைரசும் கூட பயோ போருக்கான முன்னோட்டம் என்ற ஒரு, கருத்தும் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது. இந்த நாவலும் அதேபோன்ற ஒரு வைரஸ், ஆய்வகத்தில் உற்பத்தி செய்வது போல கூறுகிறது. @DarrenPlymouth என்ற டுவிட்டர் பயனர், இந்த நாவல் வரிகளை, சமூக ஊடகங்களின் வழியாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். புத்தகத்தின் அட்டையை வெளியிட்டு, புத்தகத்தின் ஒரு பகுதியையும், அவர் பகிர்ந்து கொண்டார். அந்த நாவலில் வுஹான் -400 என்ற பெயரில் வைரஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
உயிரியல் ஆயுதம்
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மனீஷ் திவாரியும் புத்தகத்தின் ஒரு பகுதியைப் பகிர்ந்துகொண்டுள்ளார். "கொரானவைரஸ் சீனர்களால் வுஹான் -400 என்று அழைக்கப்பட்ட ஒரு உயிரியல் ஆயுதமா? இந்த புத்தகம் 1981 இல் வெளியிடப்பட்டது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது பயோ வாருக்காக தயாரிக்கப்பட்ட கிருமியா என்ற, சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளது.

மர்ம நாவல்களில் சகஜம்
ஆனால், நாவல்கள் அதிலும் கிரைம் நாவல்கள், இதுபோன்ற கற்பனைகளை கலந்து இருப்பது இயல்பானதுதான். வுகான் நகரம், சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்று. தொழில்நகரம் ஆகும். பல சர்வதேச தலைவர்கள், அங்கே சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர். பல மாதங்கள் முன்பாக, மாமல்லபுர சந்திப்புக்கு முன்பாக, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கூட அந்த நகரில் சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர்.

முக்கிய வுஹான் நகரம்
எனவே, வுஹான் நகரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நாவலிலும், அந்த நகரம் கற்பனையாக பேசப்பட்டிருக்க கூடும் என்கிறார்கள் சிலர். ஒரு கதை எழுதும்போது, அதுவும் பயோ வார் கிருமி உற்பத்தி செய்யும் நகரம் எனும்போது, அதை பெரிய அல்லது முக்கியத்துவமான நகரில் நடப்பதாகத்தானே கற்பனை செய்ய முடியும் என வினவுகிறார்கள் அவர்கள். எது எப்படியோ, பயோ வார் வைரசாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனைகளும்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications