‘கேஸ் ப்ராப்ளம்’.. நடுவானில் மோதிக் கொண்ட பயணிகள்... வியன்னாவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!
பயணி ஒருவர் வாயு வெளியேற்றியது தொடர்பான பிரச்சினையால் வியன்னாவில் துபாய் விமானம் அவசரமாக தரையிறங்கியது.
துபாய்: பயணிகள் இருவருக்கிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக துபாயிலிருந்து ஆம்ஸ்டர்டாம் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று, அவசரமாக வியன்னாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இரண்டு பயணிகளுக்கு இடையே சண்டை ஏற்படக் காரணம் அதில் ஒருவர் தொடர்ந்து வாயு வெளியேற்றிக் கொண்டிருந்தது தான் எனக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று ட்ரான்சாவியா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பயணிகளுடன் துபாயிலிருந்து ஆம்ஸ்டர்டாம் சென்று கொண்டிருந்தது. அப்போது, இரண்டு பயணிகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலுக்கான காரணம் இரண்டு பயணிகளில் ஒருவர் தொடர்ந்து வாயு வெளியேற்றிய வண்ணம் இருந்தது தான் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆரம்பத்தில் இது தொடர்பாக மோதலில் ஈடுபட்ட பயணி விமானப் பணிப்பெண்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களும் சம்பந்தப்பட்ட பயணியிடம் சென்று நிலைமையை விளக்கியுள்ளனர். ஆனால், அதற்குப் பிறகும் தொடர்ந்து அவர் வாயு வெளியேற்றவே மோதல் உருவானதாக அதில் கூறப்பட்டுள்ளது.
வாயு வெளியேற்றிய பயணி ஏதேனும் உடல் உபாதையால் பாதிக்கப்பட்டிருந்தாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.
ஆனபோதும், இந்தப் பிரச்சினையால் மோதல் அதிகரிக்கவே நிலைமையை உணர்ந்த விமானி உடனடியாக விமானத்தை வியன்னாவில் தரையிறக்கியுள்ளார். பின்னர் ஆஸ்திரியா போலீசார் மோதலில் ஈடுபட்ட இரண்டு பயணிகள் மற்றும் அவர்களுடன் பயணித்த இரண்டு பெண்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் சிறிது நேரம் தாமதமாக விமானம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான்கு பேரும் பின்னர் வேறு விமானம் மூலம் வியன்னாவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் அழைத்துச் செல்லப்படுவர் என ட்ரான்சாவியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications