‘செவ்வாயில் யாராவது இருக்காங்களா..?’... புறப்பட்டது ரஷ்ய- ஐரோப்பிய கூட்டணியின் புதிய விண்கலம்!
மாஸ்கோ: செவ்வாய் கிரகத்தில் உயிரினம் ஏதாவது இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்ய, ரஷ்ய-ஐரோப்பிய கூட்டு முயற்சியில் புதிய விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்ற சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய பூமியைப் போன்றே இருக்கும் அந்த கிரகத்தில் எதிர்காலத்தில் மனிதர்களால் நிச்சயம் வாழ முடியும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
தொடர்ந்து இது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

புதிய விண்கலம்...
இந்நிலையில், ரஷ்யா - ஐரோப்பிய கூட்டு முயற்சியில் செவ்வாய் கிரகம் குறித்து ஆராய புதிய விண்கலம் ஒன்று, கடந்த திங்களன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

வாயு ஆய்வுக் கலன்...
கஜகஸ்தானின் பைகனூர் ஏவுதளத்திலிருந்து "டிரேஸ் கேஸ் ஆர்பிட்டர்' என்கிற வாயு ஆய்வுக் கலனைச் சுமந்து கொண்டு, இந்த ரஷ்ய புரோட்டான் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

காற்று மண்டலம் ஆய்வு...
அடுத்த ஏழு மாதப் பயணத்துக்குப் பிறகு, அதாவது அக்டோபர் மாதவாக்கில் இந்த விண்கலத்தை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டானது செவ்வாய் கிரகத்தை அடையும். பின்னர், டிரேஸ் கேஸ் ஆர்பிட்டர் அந்த கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள காற்று மண்டலத்தை ஆய்வு செய்து பூமிக்குத் தகவல் அளிக்கும்.

மீத்தேன் அளவு...
நமது பூமியின் காற்று மண்டலமானது இங்குள்ள உயிரினங்கள் வெளியேற்றும் மீத்தேன் வாயுவை அதிகமாகக் கொண்டுள்ளது. இதேபோல், செவ்வாய் கிரகத்தின் காற்று மண்டலத்தில் எப்படி மீத்தேன் வந்தது என்பதை ஆய்வு செய்து அங்கு நுண்ணுயிர்கள் இருந்தனவா, இருக்கின்றனவா என இந்த விண்கலம் ஆய்வு செய்ய இருக்கிறது.

விரிவான சோதனை...
இத்தகைய வாயு ஆய்வுகள் ஏற்கனவே பலமுறை செவ்வாயில் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இம்முறை பழைய சோதனைகளை விட விரிவாக ஆய்வு செய்ய ரஷ்யாவும், ஐரோப்பாவும் முடிவு செய்துள்ளன.

ரோவர்...
இதன் அடுத்தகட்டமாக, வரும் 2018ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி அங்கு உயிரினங்கள் இருக்கின்றனவா என ரோவர் விண்கலம் அனுப்பப்படும் என ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையமான ரோஸ்காஸ்மோஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications