2 மணிநேரம் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளத்தில் மிதந்த மலேசியா
கோலாலம்பூர்: மலேசியாவில் திடீர் என்று இரண்டு மணிநேரம் கொட்டித் தீர்த்த மழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாகின.
மலேசியாவில் உள்ள ஜோஹோர் மாவட்டத்தின் தலைநகரான ஜோஹோர் பொஹ்ரு மற்றும் செலங்கர் மாநில தலைநகர் ஷா ஆலம், சுபங் ஜெயா ஆகிய இடங்களில் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு திடீர் என கனமழை பெய்யத் துவங்கியது.

பிற்பகல் 1 மணி வரை தொடர்ந்து 2 மணிநேரம் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஜோஹோர் பொஹ்ரு, ஷா ஆலம், சுபங் ஜெயா ஆகிய இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.
OPERASI BANJIR DI TONDONG, BAU SARAWAK : AIR BERKEDALAMAN 5 KAKI #BOMBA pic.twitter.com/SHV9c4XdTy
— BOMBA (@bombaJBPM) January 19, 2015 சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின. வெளியே சென்ற மக்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தத்தளித்தனர். சுபங் ஜெயாவில் உள்ள கெவாஜிபான் அருகே கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.
புன்காக் ஆலம் பகுதியில் 150க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. பகிட் ஜெலுடங் முதல் ஷா ஆலம் வரையிலான ரயில் பாதை நீரில் மூழ்கியது. இதனால் ரயில் போக்குவரத்து சில மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications