இந்த ஆசிரியைக்கு 22 வருடம் சிறைத் தண்டனை.. எதற்காக தெரியுமா?
நியூயார்க்: அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 30 வயது ஆசிரியைக்கு 22 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 மாணவர்களுடன் கணக்கே இ்லாமல் செக்ஸ் வைத்துக் கொண்ட குற்றத்திற்காக இந்த தண்டனை.
புளோரிடாவைச் சேர்ந்தவர் ஜெனிபர் பிட்சர். 30 வயதாகும் இவர் ஆசிரியையாக இருந்தவர். இவர் மீது பரபரப்பான புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர் ஆசிரியை வேலையை விட்டு நீக்கப்பட்டார், கைதும் செய்யப்பட்டார்.

தன்னிடம் படித்த 3 மாணவர்களுடன் இவர் கணக்கே இல்லாமல் செக்ஸ் வைத்துக் கொண்டதே இவர் மீதான குற்றச்சாட்டாகும். இதில் ஒருமுறை கர்ப்பமும் தரித்து பின்னார் அபார்ஷன் செய்து விட்டார்.
இவர் மீதான வழக்குகளை விசாரித்த கோர்ட் ஜெனிபருக்கு 22 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
நீதிபதி தீர்ப்பை வாசித்தபோது, எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் செய்த தவறுகளைத் திருத்த முயல்வேன். நான் செய்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். முன்பு இருந்த சுத்தமான ஜெனிபராக மாற விரும்புகிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார் ஜெனிபர்.

ஆனால் ஜெனிபரை எந்தக் காரணம் கொண்டும் மன்னிக்க முடியாது என்று மாணவர்களின் பெற்றோர் ஆவேசமாக கூறினர்.
இரு தாயார் கூறுகையில், நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது கண் முன்பாகவே எனது மகன் சீரழிக்கப்பட்டள்ளான். எனக்கு இதயமே வெடித்து விடுவது போல உள்ளது என்றார்.
ஜெனிபர் தனது சேஷ்டைகளில் ஈடுபட்டபோது மாணவர்களுக்கு 17 வயதாகும். பலமுறை அவர்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளார் ஜெனிபர். அந்த சிறார்களுக்கு வேறு வேறு பெயர்களில் ஆபாச எஸ்.எம்.எஸ்களை அனுப்பி வந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார் ஜெனிபர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மொத்தம் 30 முறை அவர் 3 மாணவர்களுடனும் உறவு வைத்துள்ளார். கார் பார்க்கிங், வேன், லாரி என எந்த இடத்தையும் விடவில்லை இவர். ஒருமுறை பள்ளிக்கூட மொட்டை மாடியில் வைத்து ஒரு மாணவனுடன் உறவு கொண்டாராம் இவர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications