"ஏற்கவே முடியாது.." இஸ்ரேல் தாக்குதல்.. ஹமாஸ் படையை வெளுத்து வாங்கிய ஐக்கிய அமீரகம்! ஏன் முக்கியம்
அபுதாபி: இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் படை நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஐக்கிய அமீரகம் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளது
கடந்த சனிக்கிழமை ஹமாஸ் படை இஸ்ரேலை நோக்கி குண்டு மழை பொழிந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவானது. அதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையை இஸ்ரேலும் ஆரம்பித்துவிட்டது. இதனால் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே விவகாரத்தில் ஐக்கிய அமீரகம் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளது அதாவது இஸ்ரேல் நகரங்கள் மீது பாலஸ்தீனிய பயங்கரவாதிகளான ஹமாஸ் படை நடத்திய தாக்குதல்களைத் தீவிரமானது என்றும் இது பிரச்சினையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் ஐக்கிய அமீரகம் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இஸ்ரேலிய மக்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் அச்சமூட்டுவதாக இருக்கிறது. இரு தரப்பிலும் உள்ள பொதுமக்கள் எப்போதும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும். இரு தரப்பிற்கும் இடையேயான மோதலில் பொதுமக்கள் இலக்காக இருக்கக் கூடாது" என்றார்.
பல ஆண்டுகளாக அரபு நாடுகள் இஸ்ரேல் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. அந்த நிலையை மாற்றும் வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் இஸ்ரேலுடனான நல்லுறவை ஏற்படுத்திய முதல் வளைகுடா நாடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆனது. இந்தச் சூழலில் தான் அவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் ஹமாஸ் படைக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications