செவ்வாய் கிரகத்தில் காய்கறி விளைய வைக்கப்போகிறதாம் நாசா.. நம்மூர் மார்க்கெட்டிலும் கிடைக்கலாம்!
நியூயார்க்: சமீபத்தில் திரைக்கு வந்துள்ள ஹாலிவுட் திரைப்படமான 'தி மார்ஷியன்' செவ்வாய்கிரக வாழ்க்கையை படம் பிடித்து காட்டியது. செவ்வாய் கிரகத்தில் தனியாக சிக்கிக்கொள்ளும் விஞ்ஞானி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள மேட் டேமோன், அங்கேயே காய்கறி பயிரிட்டு தனது வாழ்க்கையை நடத்திக்கொள்வதை அப்படம் சுவாரசியப்படுத்தி தந்துள்ளது.
ஆனால் சினிமா ரிலீஸ் ஆகும் முன்பே, விண்வெளியில் விவசாயம் நடந்துவிட்டது என்பதை நாசா உறுதி செய்து ஆச்சரிய ரேகைகளை மக்கள் முகங்களில் பரவ விட்டுள்ளது.

நாசா சார்பில் சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் (ISS) அமைக்கப்பட்டு, அங்கு விஞ்ஞானிகள் குழுமி ஆய்வு நடதத்தி வருகிறார்கள். அந்த விண்வெளி கூடத்தில், காய்கறி, விளைவிக்கப்பட்டுள்ளதாம்.
உட்டா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின், மண்ணியல், தாவரவியல் இயக்குநர் ப்ரூஸ் பக்பீ ஆலோசனைப்படி, கடினமான சூழ்நிலை கொண்ட விண்வெளியில் காய்கறி விளைவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், விண்வெளியில் காய்கறி சலாட் செய்ய தேவைப்படும் காய்கறிகளை மட்டும் பயிரிட்டு விஞ்ஞானிகளின் பசியாற்றுவது எங்கள் நோக்கமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

காய்கறி பயிரிடும் திட்டத்திற்கு, வெஜ்-01 என்று நாசா பெயர் சூட்டியுள்ளது. ஏற்கனவே வெற்றிகரமாக காய்கறி விளைவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை வேறு கிரகங்களில் செயல்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக செவ்வாயில் மரம் நடு விழா வெகு விரைவில் நடக்கலாம் என்கிறது நாசா வட்டாரம்.

காய்கறிகளை விளைவிப்பதால், விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு மனரீதியாக, தெம்பு கிடைப்பதாக தெரியவருகிறது. பூமியில் இருப்பதை போன்றே அவர்கள் உணர தொடங்கியுள்ளனராம்.












Click it and Unblock the Notifications