ஐந்து முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஒரே மேடையில்!
இந்த ஆண்டு, அமெரிக்காவை புரட்டிப்போட்ட சூறாவளிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் கலைநிகழ்ச்சியில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஐந்து பேர் ஒரே மேடையில் கலந்துகொண்டனர்.
டெக்சஸ் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் பங்கேற்றனர்.
ஹார்வி, இர்மா மற்றும் மரியா சூறாவளிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நடத்தப்பட்ட தி ஒன் அமெரிக்கன் அப்பீல் என்ற இந்த நிகழ்ச்சி, இதுவரை, 31 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம், ஹார்வி சூறாவளியால் பில்லியன் கணக்கான டாலர் சேதம் ஏற்பட்டு, டெக்சஸ் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட போதே, இதற்கான முறையீட்டை தலைவர்கள் வைத்தனர்.
தற்போது, புளோரிடா, போர்ட்டோ ரீக்கோ மற்றும் வெர்ஜின் தீவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் இந்த திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது.
"முன்னாள் அதிபர்கள் என்ற முறையில், எங்கள் சக அமெரிக்கர்கள் மீண்டுவர நாங்கள் உதவ வேண்டும் என நினைத்தோம்", என்று முன்னாள் அதிபர் ஒபாமாவின் பதிவு செய்யப்பட்ட செய்தி மூலம், நிகழ்ச்சிக்கு செல்பவர்களுக்கு விளக்கினார்.
"மக்கள் இங்கு துன்புறுத்தப்படுகிறார்கள். ஒரு டெக்சஸ் வாசியாக கூறுகிறேன். இங்கு தண்ணீரை விட, நிறைய அன்பை டெக்சஸ் வைத்துள்ளது", என்றார் ஜார்ஜ் புஷ்.
நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு, தேசிய கீதத்திற்காக ஐந்து முன்னாள் அதிபர்களும் மேடையில் ஒன்றாக தோன்றினர்.
பின்னர், அமெரிக்கர் என்பதில் பெருமைகொள்வோம் என்ற லீ கிரீண் உட்டின் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியில் பாடகி் லேடி காகாவும் பங்கேற்று பாடினார்.
தற்போதைய அதிபர் டிரம்ப், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியின் "சிறப்பான பணியைப் பாராட்டியும், தனது மிகுந்த நன்றிகளைத் தெரிவித்தும்" அவர் ஒரு செய்தி அனுப்பியிருந்தார்.
கடந்த வாரம், முன்னாள் அதிபர்கள் ஒபாமா மற்றும் புஷ் ஆகியோர் ஆற்றிய உரைகள், தற்போதைய அதிபர் டிரம்ப் மீதான மறைமுக விமர்சனமாகவே பார்க்கப்படுகின்றன.
பிற செய்திகள் :
- கென்னடியின் மரணம் தொடர்பான கோப்புகளை வெளியிட டிரம்ப் திட்டம்: புதிய தகவல்கள் வெளியாகுமா?
- சக்தி இழக்கிறதா மோடி மந்திரம்?
- மரணத்தீவு: ரஷ்யாவில் உள்ள பிரிட்டனின் சித்திரவதை முகாம்
- 1962 இந்திய-சீன போர்: எனது தோட்டா சீன சிப்பாயின் கண்ணை உரசிச் சென்றது
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்















Click it and Unblock the Notifications