அமெரிக்கப் பள்ளிக்குள் புகுந்து மர்மநபர் துப்பாக்கிச் சூடு... மாணவி உட்பட 4 பேர் படுகாயம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் நுழைந்து மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவி உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் போர்ட்லாண்ட் நகரில் உள்ளது ரோஸ்மேரி ஆண்டர்சன் பள்ளிக்கூடம். இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் ஒருவர், கண்ணில் பட்ட மாணவர்களை எல்லாம் சுட்டுத் தள்ள ஆரம்பித்தார். இதில் ஒரு மாணவி உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

Four injured in shooting near US school

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்நபர் தலைமறைவாகி விட்டார். தப்பியோடிய அந்நபரைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தை அடுத்து துப்பாக்கி சூடு நடந்த பள்ளிக்கூடம் மட்டுமின்றி அதன் அருகில் உள்ள மற்றொரு பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப் பட்டது. இது தொடர்பாக போர்ட்லேண்ட் அமைச்சர் ஜானி பிராட்போர்டு கூறுகையில், மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+