சார்ஜாவில் பயங்கர கார் விபத்து: இந்தியர் உட்பட 4 பேர் பலி!
சார்ஜா: சார்ஜாவில் நேற்று அதிகாலையில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்து ஒன்றில் ஒரு இந்தியர் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.
சார்ஜா ராணுவத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி, தனது ராணுவச் சீருடையை சலவைக்கு போட்டிருந்ததை மறந்து போய் தனது அன்றாட அலுவல்களில் மூழ்கிப் போனார்.
இந்த நிலையில், உயரதிகாரிகளின் அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு அவர் தயாரானபோது சீருடைகள் இல்லாததை கண்டு திடுக்கிட்ட அவர் சலவைக்கு துணி போட்ட கடைக்கு போன் செய்தார்.
சலவைக் கடைக்கு விரைவு:
நள்ளிரவு சுமார் 2 மணி ஆனதால் கடை மூடப்பட்டிருக்கவே அதில் வேலை செய்யும் ஊழியர்களை தேடிச் சென்ற அவர், இருவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு வேகமாக ஓட்டும்படி டிரைவரிடம் கூறினார்.
இரண்டு துண்டாகிய கார்:
அவசரமாக காரை ஓட்டிய டிரைவர் சார்ஜா விமான நிலையம் அருகே சாலையோரமாக பழுதாகி நின்றிருந்த லாரியை கவனிக்கத் தவறிய அதே வேளையில் அந்த லாரியின் பின்புறத்தில் பயங்கர சத்தத்துடன் மோதிய கார் இரண்டு துண்டங்களாகியது.
துண்டிக்கப்பட்ட தலைகள்:
முன் இருக்கையில் அமர்ந்திருந்த டிரைவர் உள்பட இருவர் தலை துண்டிக்கப்பட்டு கண்ணாடி வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டனர்.
நான்கு பேரும் பலி:
ராணுவ அதிகாரி உள்பட பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததையடுத்து இந்த விபத்தில் மொத்தம் 4 பேர் பலியாகினர்.
2 பேர் ஆசியர்கள்:
இறந்த நான்கு பேரில் இரண்டு பேர் எமிரேட்ஸைச் சேர்ந்தவர்கள். 2 பேர் ஆசியர்கள், அதில் ஒருவர் இந்தியர் என்று தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications