இந்தோனேசிய கடலுக்கு அடியில் 59 அடி நீள பொருள்: ஏர் ஏசியா விமான பாகமா?
ஜகர்தா: இந்தோனேசியா கடலில் 4 பெரிய பொருட்கள் கிடப்பதை சோனார் கருவி கண்டுபிடித்துள்ளது. அவை கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் க்யூஇசட்8501 ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் இந்தோனேசியாவின் ஜாவா கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜாவா கடலில் விமானத்தை தேடும் பணி துவங்கி இதுவரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஜாவா கடல் பகுதியில் தொடர்ந்து மோசமான வானிலை நிலவுவதால் மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியவில்லை.

4 பெரிய பொருட்கள்
தேடல் பணி நடக்கும் இடத்தில் கடலின் தரை மட்டத்தில் 4 பெரிய பொருட்கள் கிடப்பதை சோனார் கருவி கண்டுபிடித்துள்ளது. அவை விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

59 அடி நீளம்
கடலின் தரைமட்டத்தில் கிடக்கும் 4 பெரிய பொருட்களில் ஒன்று 59 அடி நீளம் கொண்டதாக உள்ளது.

கருப்பு பெட்டி
விமானத்தின் கருப்பு பெட்டியை தேட சிறப்பு கருவிகள் ஜாவா கடல் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாக மோசமான வானிலை தான் காரணம் என்று கூறப்படுகிறது.

தேடல்
கடலுக்கு அடியில் சென்று உடல்கள் மற்றும் விமான பாகங்களை தேடும் பணியில் 89 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர ரஷ்யாவில் இருந்து டைவர்கள் வரவழைக்கப்பட உள்ளனர் என்று தேடல் பணிக்கு தலைமை வகிக்கும் பாம்பங் சுலிஸ்டியோ தெரிவித்துள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications