இங்கிலாந்தில் தொங்கு நாடாளுமன்றம் அமையும்: தேர்தல் கருத்துக்கணிப்பு
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
650 இடங்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. வாக்குப்பதிவு இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது.

இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் முக்கிய நாளிதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் தலா 35 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் இங்கிலாந்தில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்று தெரிய வந்துள்ளது.
பெரும்பான்மை பெற 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சிக்கு தலா 273 சீட்களே கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.
இந்நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் யாராவது செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் ரூ. 4.87 லட்சம் அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications