வாலிபருடன் சேர்ந்து டாக்சியில் ஏறிய பெண் பேய்: வீடியோவை நீங்களே பாருங்க
டோக்கியோ: ஜப்பானில் வாலிபர் ஒருவர் டாக்சியில் ஏறும்போது அவருடன் பேயும் சேர்ந்து ஏறும்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.
பேய் இருக்கிறதா, இல்லையா என்பதே பெரும் விவாதமாக உள்ளது. இந்நிலையில் பேய் பற்றிய ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. ஜப்பானில் உள்ள நகரம் ஒன்றில் தான் பேயின் உருவம் வீடியோவில் பதிவாகியுள்ளது.
வீடியோவை பார்த்த பலரும் தற்போது அதை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பேய்
வாலிபர் ஒருவர் நடந்து வருகிறார். ஒரு தூணை தாண்டி வரும்போது தலைவிரிகோலத்தில் உள்ள ஒரு பேய் அவரை பின்தொடர்கிறது. டாக்சியில் ஏறும் அவருடன் சேர்ந்து பேயும் ஏறுகிறது. இது தான் அந்த பேய் வீடியோவின் விபரம்.

பொய்
பேயாவது டாக்சியில் வந்து ஏறுவதாவது என்று சில நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர். சிலரோ இது யாரோ செய்த கிராபிக்ஸ் என்கிறார்கள். இன்னும் சிலரோ ஒரு வேளை பேய்க்கு அந்த வாலிபர் மீது காதல் போல என்கிறார்கள்.

பேய் இருக்கு
ஜப்பானில் உள்ள இஷினோமாகி நகரை கடந்த 2011ம் ஆண்டு சுனாமி தாக்கியது. அந்த நகரை சேர்ந்த 3 ஆயிரத்து 100 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் பேய்கள் உலா வருவதாக மக்கள் நம்புகிறார்கள்.
டாக்சிகள்
தற்போது இஷினோமாகி நகரில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 800 பேர் வசிக்கிறார்கள். அந்த நகரில் டாக்சி ஓட்டும் பலர் பேய்கள் தங்கள் வாகனங்களில் ஏறியதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications