டிவி சீரியலால் நல்லதும் நடக்கும்... கொலைக் குற்றவாளியைப் பிடிக்க உதவிய ஜெர்மன் சீரியல்!
பெர்லின்: டிவி சீரியல் ஒன்றில் கிடைத்த ஐடியா மூலம் சுமார் 26 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை கொலை செய்த குற்றவாளியைக் கண்டு பிடித்துள்ளார் ஜெர்மன் போலீஸ் அதிகாரி ஒருவர்.
கடந்த 1987ம் ஆண்டு ஒருநாள் ஜெர்மனியில், ஒஸ்னாபிரியூக் நகரை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி பள்ளியிலிருந்து வீடு திரும்பவில்லை என போலீசில் புகார் அளித்தனர் அவளது பெற்றோர். ஆனால், மாயமான சிறுமியின் சடலம் மட்டுமே போலீசின் கைக்கு கிடைத்தது. கொலைக்கான எந்த ஆதாரமும் கிடைக்காமல் போலீசார் குழம்பினார். குற்றவாளியைக் கண்டுபிடிக்க இயலாத காரணத்தால் கிட்டத்தட்ட அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், முன்பு சிறுமி வழக்கை விசாரித்து வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் எதேச்சையாக அண்மையில் டிவி யில் ஒளிபரப்பான குற்ற சம்பவம் தொடர்பான புலனாய்வு தொடரை பார்த்தார். நாமும் வழக்கை இதே பாணியில் விசாரித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, சிறுமி வழக்கை மீண்டும் தூசி தட்டினார் அதிகாரி.
அதன்படி, போலீஸ் வசமிருந்த, கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடைகள் மற்றும் அதில் படிந்திருந்த கொலையாளியின் தடயங்களை சேகரித்தார். இந்த கொலையில், சந்தேகப்படும் நபர்களிடம், மரபணு சோதனையும் நடத்தப்பட்டது. அதில், 45 வயதுடைய நபரின் மரபணு ஒத்துப்போனது. இதையடுத்து, அந்த நபர், கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘1987ம் ஆண்டு, 19 வயதுடையவராக இருந்த குற்றவாளி, ஒன்பது வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும், அப்போது, சிறுமி, தன் பெற்றோரிடம் புகார் தெரிவிப்பதாக மிரட்டியதை அடுத்து, அச்சிறுமியை அவன் கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.
.












Click it and Unblock the Notifications