நகர வாழ்க்கையை மேம்படுத்த புதிய நிறுவனம் துவங்கும் கூகுள்
நியூயார்க்: நகரங்களை மேம்படுத்த கூகுள் நிறுவனம் சைட்வாக் லேப்ஸ் என்ற நிறுவனத்தை துவங்க உள்ளது.
நகரங்களை மேம்படுத்த கூகுள் நிறுவனம் சைட்வாக் லேப்ஸ் என்ற நிறுவனத்தை துவங்க உள்ளது என அந்நிறுவன சிஇஓ லாரி பேஜ் கூகுள் பிளஸ்ஸில் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் தன்னிச்சையாக செயல்பட உள்ள அந்த நிறுவனத்தை ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓவும், நியூயார்க் நகர பொருளாதார மேம்பாட்டுத்துறை துணை மேயராகவும் இருந்த டான் டாக்டராப் தலைமை தாங்கி நடத்த உள்ளார்.

இந்நிறுவனம் புதிய தயாரிப்புகளை உருவாக்குவதுடன், நகரங்களில் வாழ ஆகும் செலவு, போக்குவரத்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்து தீர்வு காணும். இது குறித்து லாரி பேஜ் கூகுள் பிளஸ்ஸில் தெரிவித்திருப்பதாவது,
இந்த நிறுவனம் கூகுளின் முக்கிய வியாபாரத்தில் இருந்து மாறுபட்டு உள்ளது. புதிய நிறுவனம் மூலம் நகரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தலாம் என்று நான் நம்புகிறேன். உலக மக்களில் பலர் நகரங்களில் வசிக்கிறார்கள், வேலை பார்க்கிறார்கள். அப்படி இருக்கையில் நகர வாழ்க்கையை மேம்படுத்த பல வாய்ப்பு உள்ளது.
இந்த பதிவை பலர் நகரங்களில் இருந்து வாசிக்கக்கூடும். நல்ல வீடு, சிறந்த அரசு போக்குவரத்து, குறைந்த மாசு, அதிக பூங்காக்கள், பாதுகாப்பாக பைக் ஓட்டும் பாதைகள் உள்ளிட்ட பலவற்றை பற்றி நீங்கள் யோசிக்கலாம். உலகின் பல்வேறு நகரங்களில் இந்த வசதிகள் உள்ளன.
இந்நிலையில் நகர வாழ்க்கையை மேம்படுத்த சைட்வாக் லேப்ஸ் நிறுவனம் குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications