”மஞ்சள் பூக்களின் மாலையுடன் வரவேற்கிறோம்”- டூடுள் போட்டு மோடியை அசத்திய கூகுள்!
வாஷிங்டன்: அமெரிக்காவுடனான இந்தியத் தகவல் தொடர்பு வளர்ச்சிகளுக்கு அச்சாரமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடியை தனது முகப்புப் பக்கத்தில் மாலை போட்டு வரவேற்றுள்ளது கூகுள்.
அதற்கு அருகில் கூகுளுக்கு பிரதமர் மோடியை வரவேற்கிறோம் என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏற்கனவே, கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழரான சுந்தர் பிச்சை பெருமை சேர்த்துள்ள நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் அலுவலகத்திற்கு விசிட் அடித்து 30 ஆண்டுகளில் சிலிக்கான் வேலியில் கால் பதித்த முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றுவிட்டார்.
கூகுள் தலைமை அலுவலகத்தில் அதன் சி.இ.ஓவும், தமிழருமான சுந்தர் பிச்சை, மோடியை வரவேற்று அலுவலகம் உள் அழைத்துச் சென்று அலுவலகத்தை சுற்றி காண்பித்து விளக்கம் கொடுத்தார்.
இதையடுத்து சுமார் ஆயிரம் பேர் குவிந்திருந்த அரங்கத்தில் மோடி, தினமும் 15 மணி நேரத்தை கம்ப்யூட்டர் முன்பாக செலவிட்டு நீங்கள் தீர்வுகளை கண்டுபிடிக்கிறீர்கள். இதற்காக இந்தியர்கள் சார்பில் உங்களுக்கு (கூகுள் ஊழியர்கள்) நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார்.
இந்நிலையில் அவரது வருகையைப் போற்றும் வகையில் தனது முகப்புப் பக்கத்தில் அழகான மஞ்சள் நிற பூக்களுக்கு நடுவே பச்சை நிற இலைகள் நிறைந்த மாலைத் தோரணத்தை இட்டு மோடியை வரவேற்றுள்ளது கூகுள்.












Click it and Unblock the Notifications