அமெரிக்க வணிக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
நியூஜெர்சி: நியூஜெர்சியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மர்ம மனிதன் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கென்யாவில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் பலர் பரிதாபமாகப் பலியானார்கள். இந்நிலையில் நேற்று மாலை அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூஜெர்சியில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு குறித்து விவரமான தகவல்கள் ஏதும் இல்லை. வணிக வளாகத்தில் புகுந்து திடீர் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் வளாகத்திற்குள்ளாகவே பதுங்கியுள்ளதால், அவனைப் பிடிக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications