ஹமாஸ் தீவிரவாதி அமைப்பு இல்லை! இஸ்ரேலுக்கு எதிராக இறங்கிய துருக்கி! இஸ்லாமிய நாடுகளுக்கு அழைப்பு
இஸ்ரேல்: இஸ்ரேலுக்கான தனது பயணத்தை ரத்து செய்த துருக்கி அதிபர் தைய்ப் எர்டோகன் ‛‛ஹமாஸ் என்பது தீவிரவாத அமைப்பு இல்லை. ஹமாஸ் என்பது தனது நிலத்தை பாதுகாக்க தேவையான போராட்டத்தை நடத்தி வரும் விடுதலை குழு'' என நாடாளுமன்றத்தில் பரபரப்பாக பேசியுள்ளார். அதுமட்டுமின்றி இஸ்லாமிய நாடுகளுக்கு அவர் அழைப்பு ஒன்றையும் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாதிகள் என அறிவித்துள்ளன.

இந்நிலையில் தான் கடந்த 7 ம் தேதி கடும் மோதல் உருவானது. 'ஹமாஸ்' தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தினர். 20 நிமிடங்களில் 7 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
இதுதவிர இஸ்ரேலுக்கு நுழைந்து அவர்கள் கடும் தாக்குதலை நடத்தினர். தங்களின் கண்ணில் பட்ட பொதுமக்களை அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். அதோடு 200க்கும் அதிகமானவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இஸ்ரேலின் கடந்த 75 ஆண்டு கால வரலாற்றில் இது மோசமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து தான் இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் தொடங்கியதாக கூறி காசா மீது உக்கிரமான வான்வெளி தாக்குதலை தொடங்கினார். இந்த தாக்குதல் 3வது வாரமாக தொடர்ந்து வருகிறது. தற்போது வான்வெளி தாக்குதல் நடத்தும் நிலையில் வரும் நாட்களில் காசா நகருக்குள் புகுந்து தரைவழி தாக்குதல் நடத்தி இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தான் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இஸ்ரேலுக்கான தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்த நிலையில் நாடாளுமன்றத்தில் தனது கட்சி உறுப்பினர்களுக்கு மத்தியில் அவர் இஸ்ரேல்-ஹமாஸ் குறித்து கருத்துகளை முன்வத்தார். அப்போது அவர் கூறியதாவது: மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் உதவிகள் கிடைக்க ரஃபா எல்லையை திறக்க வேண்டும்.
அதோடு இஸ்ரேல், ஹமாஸ் பிடித்து வைத்துள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். ஹமாஸ் என்பது ஒரு தீவிரவாத அமைப்பு இல்லை. ஹமாஸ் என்பது தனது நிலத்தை பாதுகாக்க தேவையான போராட்டத்தை நடத்தி வரும் விடுதலை குழு. இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பும் சேர்ந்து செயல்பட வேண்டும்.
மேலும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஐநாவால் முடியவில்லை. இது ஏமாற்றத்தை அளிக்கிறது. இஸ்ரேல்-ஹமாஸ் பேரை நிறுத்த வல்லரசு நாடுகளை குரல் கொடுக்க செய்யும் வகையில் நிரந்தர அமைதிக்காக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என வருத்தப்பட்டார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications