“தேவதையை” ஆசிர்வதித்த போப்: காரை நிறுத்தி இறங்கி வந்து மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஆசிர்வாதம்!
இத்தாலி: இத்தாலி சென்ற போப் பிரான்சிஸ், சாலையோரத்தில் படுத்திருந்த மாற்றுத்திறனாளி பெண்ணைக் கண்டு தனது வாகனத்தை நிறுத்தி அவரை ஆசிர்வதித்து விட்டுச் சென்றார்.
இத்தாலியில் உள்ள கலாப்ரி நகரில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு போப் பிரான்சிஸ் நாடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு சாலையோரத்தில் படுக்கையில் கிடத்திவைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை ஆசிர்வதித்தார். அப்பெண்ணின் குடும்பத்தினர் சாலையோரம் வைத்திருந்த செய்தியில்," போப் அவர்களே தேவதையை பார்க்க தயவு செய்து நில்லுங்கள்" என்று எழுதியிருந்தனர்.
இதை கவனித்த போப், தனது காரை நிறுத்தச் சொல்லி அதிலிருந்து இறங்கி அப்பெண்ணை ஆசிர்வாதம் செய்ததோடு அவரது நெற்றியில் முத்தமிட்டார். அப்பெண்ணின் குடும்பத்தாரிடமும் அவர் கைகுலுக்கினார்.
போப்பின் இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.












Click it and Unblock the Notifications