என்னா ஒரு பாதுகாப்பு... தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்குள்ளேயே ஊடுறுவிய ஹெட்லி!
நியூயார்க்: தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு நான் 2007ம் ஆண்டு சென்றேன். அப்போது நான் கல்லூரியை வீடியோ எடுத்தேன். தேசிய பாதுகாப்பு கல்லூரியை தாக்கினால் ராணுவ வீரர்கள் பலர் பலியாவார்கள் என்று நினைத்தோம். அதனால் தான் அந்த கல்லூரியை தாக்க திட்டமிட்டோம் என லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஹெட்லி தெரிவித்துள்ளார்.
26/11 மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவில் குடியேறினார். அங்கு ஒரு வழக்கில் கைதான அவர் 35 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அமெரிக்க சிறையில் இருந்தபடியே மும்பை தாக்குதல் வழக்கு குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் வாக்குமூலம் அளித்து வருகிறார். இன்று அவர் 4வது நாளாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

செல்போன்
சஜித் மிர் எனக்கு இந்திய எண்ணுடன் கூடிய செல்போனை அளித்தார். அந்த செல்போனை வாகா எல்லைக்கு எடுத்துச் சென்று வேலை செய்கிறதா என்று பார்க்குமாறு கூறினார். தீவிரவாதிகள் பயன்படுத்திய அனைத்து செல்போன் எண்களும் இந்திய எண்கள் தான். செல்போன் எண்கள் குறித்து அவர்களுக்கு கராச்சியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவு வந்தது.

ஹபீ்ஸ் சயீத்
என் மனைவி பாயிசாவுக்கு நான் ஹபீஸ் சயீத் ஆதரவாளர் என்பது தெரியும். பாயிசா சயீதை சந்தித்து தன்னை என்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். நான் பாயிசாவை விவாகரத்து செய்துவிட்டேன்.

காஷ்மீரி
அல் கொய்தாவின் 313வது பிரிகேடைச் சேர்ந்த இலியாஸ் காஷ்மீரியை சந்தித்தேன். இந்தியாவில் மேலும் பல ஆய்வு செய்யுமாறு காஷ்மீரி என்னிடம் கூறினார். நான் யாருக்கும் தெரியாமல் காஷ்மீரியை சந்தித்தேன்.

ராணுவ வீரர்கள்
தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு நான் 2007ம் ஆண்டு சென்றேன். அப்போது நான் கல்லூரியை வீடியோ எடுத்தேன். தேசிய பாதுகாப்பு கல்லூரியை தாக்கினால் ராணுவ வீரர்கள் பலர் பலியாவார்கள் என்று நினைத்தோம். அதனால் தான் அந்த கல்லூரியை தாக்க திட்டமிட்டோம்.
தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு நான் 2007ம் ஆண்டு சென்றேன். அப்போது நான் கல்லூரியை வீடியோ எடுத்தேன். தேசிய பாதுகாப்பு கல்லூரியை தாக்கினால் ராணுவ வீரர்கள் பலர் பலியாவார்கள் என்று நினைத்தோம். அதனால் தான் அந்த கல்லூரியை தாக்க திட்டமிட்டோம்.

கசாப்
கசாபின் புகைப்படத்தை பார்த்ததும் கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக என்று ஹெட்லி தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதல் முடிந்த பிறகு ஹெட்லிக்கு அவரது மனைவி பாயிசா இமெயில் அனுப்பியுள்ளார். அதில் அவர் நீங்கள் சிறந்த வேலை செய்துள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications