அந்தமானில் கனமழை: தரையிறங்க முடியாமல் சென்னைக்கே திரும்பிய விமானம்
சென்னை: 152 பயணிகளுடன் அந்தமானுக்கு சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் அங்கு பலத்த மழை பெய்ததால் சென்னைக்கு திரும்பியது.
அந்தமானில் கடந்த 8ம் தேதி முதல் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 9ம் தேதி காலை 10.30 மணிக்கு 109 பேருடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்றது. மதியம் 12.30 மணிக்கு அந்தமான் எல்லையில் விமானம் நுழைந்தது. அங்கு சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் விமானம் தரையிறங்க முடியாமல் சென்னைக்கே திரும்பியது.

இந்நிலையில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 152 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பி இன்று காலை அந்தமானுக்கு சென்றது. அந்தமானில் பலத்த மழை பெயத்ததால் விமானத்தை தரையிறக்க முடியாமல் விமானி தவித்தார். பின்னர் விமானம் சென்னைக்கு திரும்பி வந்தது.
அதில் பயணம் செய்தவர்கள் சென்னையில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் நாளை காலை மீண்டும் அந்தமானுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications