நேபாளத்தை புரட்டிப்போட்ட கனமழை, வெள்ளம்...200 இந்திய சுற்றுலா பயணிகள் தவிப்பு!
நேபாளத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையில் 200 இந்திய சுற்றுலா பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
காத்மாண்டு : நேபாளத்தில் பெய்து வரும் கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 70 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வெள்ளநீர் சூழ்ந்ததால் சுற்றுலா சென்றவர்கள் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர்.
நேபாள நாட்டில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இவற்றால் இதுவரை 70 பேர் பலியாகி உள்ளதாகத் தெரிகிறது. 36 ஆயிரம் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் சுமார் 48 ஆயிரம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 25 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், பிரபல சுற்றுலா நகரான சித்வானில் உள்ள சவுரகா பகுதியில் சுமார் 600 சுற்றுலா பயணிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 200 பேர் இந்தியப் பயணிகள்.அவர்கள் தங்கி உள்ள ஓட்டல்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அவர்களால் வெளியேற முடியவில்லை.
சுற்றுலாப் பயணிகளை அந்த இடத்தில் இருந்து அழைத்து வர யானைகளை பயன்படுத்தலாமா என்று அதிகாரிகள் யோசனை நடத்தி வருகின்றனர். வெள்ளநீர் வடிய காலதாமதமாகும் என்பதோடு ஆங்காங்கே மலைச்சரிவுகளும் ஏற்பட்டு வருவதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனினும் மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications