கத்தாரில் கொட்டு கொட்டுன்னு கொட்டிய மழை: சென்னை போல படகு விடும் யோசனையில் மக்கள்
தோஹா: கத்தாரில் இன்று கன மழை பெய்துள்ளதால் தோஹா உள்பட பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கத்தார் மக்கள் இன்று காலை எழுந்தபோதே மழையின் முகத்தில் தான் விழித்தார்கள். கத்தாரில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் சில மணிநேரம் கத்தாரில் கனமழை கொட்டித் தீர்த்தது.
மழை சில மணிநேரம் பெய்தாலும் சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாகிவிட்டன. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தோஹா மக்கள் ட்விட்டரில் புகைப்படம், வீடியோ வெளியிட்டுள்ளனர்.
|
தோஹா
தோஹாவில்...இது வழக்கமான காலை காட்சி அல்ல, பாலவனத்தில் மழை என மத்தியா ட்வீட் செய்துள்ளார்.
|
வெள்ளம்
தோஹாவில் லேசாக மழை பெய்தாலும் இது தான் ஆகும். எங்கு பார்த்தாலும் வெள்ளம் #Doha #Rain #Flooded என இரண்டா தரகா தெரிவித்துள்ளார்.
|
விமான நிலையம்
14 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள விமான நிலையம் என மேற்கூரை வழியாக மழை நீர் கொட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சல்மான் கான்.
|
வாகனங்கள்
சாலைகளில் நீர்- கத்தாரில் கனமழை #Qatar #DohaRain என முகமது வாசீம் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
|
பள்ளி
தோஹாவில் மழை பெய்தால் நீங்கள் பள்ளிக்கு நீந்தித் தான் செல்ல வேண்டும் #doha #asdflood என நயீசா ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications