வரலாற்றை மாற்றிய “பியர்ல் ஹார்பர்” கடற்பகுதியில் நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டர்
ஹவாய்: பசிபிக் கடலில் அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவருகே அமைந்துள்ள பியர்ல் துறைமுகத்தில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியது.
இதனை ஷாவ்ன் வின்ரிச் என்கின்ற சுற்றுலாப் பயணி வீடியோவாக பதிவு செய்துள்ளார். கடற்கரையில் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த அவர் ஹெலிகாப்டர் ஒன்று தங்களை நெருங்கி வருவதைக் கண்டுள்ளார்.
"நான் அவர்கள் ஏதோ ஒரு சாகசத்திற்காக வருவதாக நினைத்து அதனை பதிவு செய்தேன். ஆனால், அந்த ஹெலிகாப்டர் திடீரென்று தண்ணீரில் விழுந்து நொறுங்கியது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
காப்பாற்றும் முயற்சி:
உடனடியாக அவரும், மற்ற சுற்றுலாப் பயணிகளும் ஹெலிகாப்டரில் பயணித்தவர்களை காப்பாற்ற குதித்துள்ளனர். அந்த ஹெலிகாப்டரில் பைலட் உட்பட 6 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் 5 பேர் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள்.
பெல் 206 ரகத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஜெனிசிஸ் நிறுவனம் மூலமாக சுற்றுலாவிற்காக அனுப்பப்பட்டதாகும். பயணித்தவர்களில் ஒருவரான 16 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் பைலட் மற்றும் மற்றொருவரின் நிலை குறித்த தகவல்கள் தெரியவில்லை. இந்த வருடத்தில் ஓகுவில் நடைபெற்ற இரண்டாவது ஹெலிகாப்டர் விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
பியர்ல் துறைமுகத்தின் பின் ஒரு பெரிய உலக வரலாறே ஒளிந்து கொண்டிருக்கின்றது. இரண்டாம் உலகப் போரில் பெரும் பங்கு பெற்றது பியர்ல் ஹார்பர். இதன் மீது ஜப்பான் நடத்திய விமானத் தாக்குதல் 1941ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி. அன்றுதான் உலகப் போரில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு வரலாறே மாறியது. ஜப்பான் தாக்குதலில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 8 அமெரிக்கப் போர்க்கப்பல்களும், 200 விமானங்களும் அழிந்தன. 3,000 அமெரிக்க வீரர்களும் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து அமெரிக்கா 2ம் உலகப் போரில் குதித்தது. ஜப்பான் மீதும், ஜெர்மனி மீதும் போர்ப் பிரகடனம் செய்தார் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட். இதன் மூலம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய 4 வல்லரசு நாடுகளும் ஒரே அணியில் நின்று ஜெர்மனி மீதும், ஜப்பான் மீதும் தாக்குதல் நடத்தின. ஜப்பான் மீது அணுகுண்டும் வீசப்பட்டது நினைவுகூறத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications