For Daily Alerts
Just In
டென்மார்க்கில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து: 3 பேர் பலி, ஒருவர் மாயம்
கோபென்ஹாகன்: டென்மார்க்கில் ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
மத்திய டென்மார்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ராபின்சன் 44 ரக ஹெலிகாப்டர் ஒன்று வெள்ளிக்கிழமை அன்று 4 பேருடன் சாம்சோ தீவுக்கு கிளம்பியுள்ளது. விமானம் சாம்சோ தீவின் கிழக்கு பகுதியில் பறக்கையில் திடீர் என்று ராடாரில் இருந்து மாயமானது.
பின்னர் அப்பகுதியில் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த 3 பேர் பலியாகினர். ஒருவரை காணவில்லை. விமானம் விபத்துக்குள்ளான காரணம் இன்னும் தெரியவில்லை.
Comments
English summary
A helicopter carrying four persons crashed into the sea in central Denmark killing three.
Story first published: Sunday, September 7, 2014, 11:42 [IST]