அதிகரித்த அபின், ஹெராயின் கலந்த மருந்துகள் - அமெரிக்காவில் ஒரே ஆண்டில் 47,000 பேர் பலி
நியூயார்க்: அமெரிக்காவில் அளவுக்கு அதிகமாக போதைப் பொருட்கள் கலந்த மருந்துகளை எடுத்துக் கொண்டதால் கிட்டத்தட்ட 47,000 அமெரிக்கர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டில் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தரும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
கடுமையான வலியை மரத்துப்போக வைக்கவும், மன உளைச்சலுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படும் அபின் சார்ந்த மருந்துகள் மற்றும் ஹெராயின் பயன்பாடு அமெரிக்காவில் அதிகரித்துள்ளது.
இதனால் கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் 47,055 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 6.5 சதவீதம் அதிகம் என தெரியவந்துள்ளது.

அதிகரித்த போதைப் பழக்கம்:
அமெரிக்காவின் வடக்கு விர்ஜினியா, நியூ மெக்சிகோ, நியூ ஹாம்ப்ஷைய்ர், கென்ட்டுக்கி மற்றும் ஓஹியோ மாநிலங்களில் இத்தகைய இறப்புகள் அதிகம் பதிவாகியுள்ளது என அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

அபின் கலந்த மருந்துகளே காரணம்:
கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து ஓவர்டோஸ் இறப்புகள் 137 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் அபின் கலந்த மருந்துகளை அதிகமாக பயன்படுத்தி இறந்தவர்கள் எண்ணிக்கை 200 சதவீதமாகியுள்ளது.

கொத்துக் கொத்தாய் சாவு:
கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் கிட்டதட்ட 5 லட்சம் பேர் இதைப்போல் இறந்துள்ளனர். அதிகமாக ஹெராயின் பயன்படுத்தி இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

ஓவர்டோஸ் இறப்புகள்:
உள்நாட்டு கள்ளச்சந்தையில் குறைந்த விலையில் அதிகவீரியம் மிக்க ஹெராயின், அபின் சார்ந்த மருந்துகள் தாராளமாக நடமாடுவதால்தான் இதைப்போன்ற ஓவர்டோஸ் இறப்புகள் அதிகரித்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத்துறை நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications