மைக்கேல் ஷூமாக்கர் இறந்துவிட்டாரா?: மருத்துவமனை விளக்கம்
பாரிஸ்: பார்முலா ஒன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் இறந்ததாக வந்த தகவல் உண்மை இல்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பார்முலா ஒன் கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூமாக்கர் கடந்த டிசம்பர்ம் மாதம் 29ம் தேதி பிரான்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் பிரான்ஸில் உள்ள கிரனோபல் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவர் கோமாவில் உள்ளார்.

அண்மையில் அவரது உடல் அசைந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ஷூமாக்கர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதையடுத்து ஷூமாக்கர் இறக்கவில்லை என்றும், அவ்வாறு பரவிய தகவல் வெறும் வதந்தி என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷூமாக்கருக்கு தானாக சுவாசிக்க முடியாததால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications