விமான கடத்தல்காரருடன் சிரித்தபடி செல்ஃபி எடுத்த பிணையக் கைதி: எதற்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

கெய்ரோ: எகிப்து விமானத்தை கடத்திய சயிப் எல் தின் முஸ்தபாவுடன் பிணையக் கைதி ஒருவர் சிரித்தபடி செல்ஃபி எடுத்துள்ளார்.

எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நகரில் இருந்து 81 பயணிகள் மற்றும் 7 சிப்பந்திகளுடன் கெய்ரோ கிளம்பிய விமானத்தை எகிப்தை சேர்ந்த சயிப் எல் தின் முஸ்தபா என்பவர் கடத்திச் சென்று சைப்ரஸில் உள்ள லார்னாகா விமான நிலையத்தில் வலுக்கட்டாயமாக தரையிறக்க வைத்தார்.

அவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை காட்டி விமானத்தை தரையிறக்குமாறு மிரட்டியதாக விமானி உமர் அல் கமால் தெரிவித்தார். எகிப்து அதிகாரிகள் முஸ்தபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர் 4 சிப்பந்திகள் மற்றும் 3 பயணிகளை தவிர்த்து மீதமுள்ளவர்களை விடுவித்தார்.

சைப்ரஸில் வசிக்கும் தனது முன்னாள் மனைவியை சந்திக்க வேண்டும் என்று கூறினார். என்ன கோரிக்கை விடுப்பது என்றே தெரியாமல் மாறி, மாறி பேசுகிறார், இந்த நபர் தீவிரவாதி அல்ல ஒரு முட்டாள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறுதியில் விமானத்தில் இருந்த 7 பேரும் தப்பித்த பிறகு அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் பிணையக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 3 பயணிகளில் ஒருவரான இங்கிலாந்தின் லீட்ஸ் நகரை சேர்ந்த பென் இன்னஸ்(26) என்பவர் முஸ்தபாவுடன் செல்ஃபி எடுத்துள்ளார். பென் தற்போது ஸ்காட்லாந்தில் உள்ள அபர்டீன் நகரில் வசிக்கிறார்.

இது குறித்து பென் கூறுகையில்,

முஸ்தபா தனது உடலில் கட்டியிருந்தது உண்மையான வெடிகுண்டு பெல்ட்டா என்பதை அருகில் சென்று பார்க்க அவருடன் செல்ஃபி எடுத்தேன் என்றார்.

முஸ்தபா தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்ட் போலியானது என்பது பின்னர் தெரிய வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+