ஹவுஸ் ஓனர் வீட்டுக்குள்ளேயே "பிராத்தல்".. பலே வேலைக்காரப் பெண் கைது.. துபாயில்!
துபாய்: துபாயில், வீட்டு வேலை பார்த்து வரும் இந்தோனேசியப் பெண் ஒருவர், தான் வேலை பார்த்து வந்த வீட்டுக்குள்ளேயே படு கமுக்கமாக விபச்சாரத் தொழிலை நடத்தி வந்த செயல் துபாயை அதிர வைத்துள்ளது.
அந்த வீட்டு உரிமையாளருக்குத் தெரியாமலயே இதை அவர் செய்து வந்துள்ளார். தற்போது அந்தப் பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பெரிய வீடான அதில் ஒரு அறையை தனது விபச்சாரத்திற்கு அப்பெண் பயன்படுத்தி வந்துள்ளார். வீட்டு உரிமையாளருக்குக் கொஞ்சம் கூட சந்தேகம் வராத அளவு அவர் செயல்பட்டுள்ளார்

ராத்திரி வந்த தொலைபேசி
சம்பவத்தன்று அந்த வீட்டு உரிமையாளரின் மனைவிக்கு இரவு 11 மணியளவில் போன் வந்துள்ளது. அந்தப் போனை அவரது கணவர் எடுத்துப் பேசினார்.

உங்க வீட்டுல அப்படி அப்படி..!
அதில் பேசிய நபர், உங்களது வீட்டு வேலைக்காரப் பெண் பல ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளார். இப்போது கூட அவர் பலருடன் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

ஆளைக் காணோம்
இதையடுத்து வேலைக்காரப் பெண் தங்கியிருக்கும் பகுதியில் போய்த் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் இல்லை. வீடு முழுவதும் தேடியும் ஆள் கிடைக்கவில்லை.

வெளியிலிருந்து வந்தார்
இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த அப்பெண் இரவு நெடு நேரம் கழித்து திரும்பியபோது வீட்டு உரிமையாளரிடம் சிக்கிக் கொண்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது விபச்சாரம் செய்வதாக ஒப்புக் கொண்டார்.

வீட்டுக்குள்ளேயே
மேலும் அவரிடம் விசாரித்தபோது அந்த வீட்டுக்குள்ளேயே ஒரு அறையில் தான் விபச்சாரத்தை நடத்தி வருவதாகவும், பல ஆண்கள் வந்து போயுள்ளதாகவும் கூறி அதிர வைத்துள்ளார்.

கைது
இதையடுத்து வீட்டு உரிமையாளர் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் 33 வயதான ஒய்பி என்ற சுருக்கப் பெயர் கொண்ட அப்பெண் கைது செய்யப்பட்டார்.

100 திர்ஹாம்
தன்னிடம் உறவு வைத்துக் கொள்ள விரும்புவோரிடம் 100 திர்ஹாம் பணம் வசூலித்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார். கடைசியாக ஒரு பாகிஸ்தானி வந்ததாகவும், அவரிடம் 200 திர்ஹாம் வசூலித்ததாகவும் கூறியுள்ளார். தற்போது அந்த பாகிஸ்தான் நபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications