இந்தியாவிலிருந்து சென்ற கப்பல் மீது ஹவுதி தாக்குதல்! உள்ளே புகுந்து உதவிய அமெரிக்கா.. ஷாக் சம்பவம்!
டெல் அவிவ்: காசா போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இந்தியாவிலிருந்து சூயஸ் கால்வாயை நோக்கி சென்று கொண்டிருந்த எண்ணெய் டேங்கர் கப்பல் மீது ஏவுகணைகளை வீசியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த நிலத்திற்காக ஹமாஸும், அவர்களுக்கு எதிராக இஸ்ரேலும் அடிக்கடி மோதல்களில் ஈடுபடுவதுண்டு. இந்த மோதல் கடந்த அக். 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் தீவிரம் அடைந்தது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

ஏற்கெனவே போர் நிறுத்தம் குறித்து ஐநா பொது சபையில் ஜோர்டன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. இதை இஸ்ரேல் கடைபிடிக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் அதை மதிக்காமல் இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படி இருக்கையில் ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலுக்கு எதிராக சரக்கு கப்பல்களை கடத்தும் வேலையில் இறங்கியுள்ளனர். செங்கடலில் இஸ்ரேலிய கப்பல் எது வந்தாலும் அதை கடத்துவோம் என்றும் எச்சரித்திருந்த அவர்கள், சமீபத்தில் இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் ஒன்றையும் கடத்திச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து சூயஸ் கால்வாய் நோக்கி சென்றுக்கொண்டிருந்த 'ஆர்ட்மோர் என்கவுன்டர்' எனும் எண்ணெய் டேங்கர் கப்பலை நோக்கி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசியுள்ளனர். நல்வாய்ப்பாக இதனை அமெரிக்க போர் கப்பல் முறியடித்திருக்கிறது. மேலும், சம்பவம் நடந்த பகுதியில் சுற்றி திரிந்த ஹவுதிக்கு சொந்தமான விமானம் ஒன்றையும் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது. பாப் எல்-மண்டேப் ஜலசந்தி இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
இந்த கப்பல் மங்களூரிலிருந்து சூயஸ் கால்வாய் நோக்கி பயணித்திருக்கிறது. மட்டுமல்லாது கப்பலில் ஆயுதமேந்திய பாதுகாப்பு குழுவினரும் இருந்திருக்கின்றனர். அமெரிக்காவின் உதவியால் கப்பலும், கப்பலில் இருந்தவர்களும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஹவுதி கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் கப்பலில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications