முடங்கிப் போன சைரன்.. பற்றி எரியும் ஹவாய்.. இப்போ பெரிய சிக்கல் தான்! என்ன இப்படி ஆகிடுச்சு! ஷாக்
ஹவாய்: பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீ என்பது கடந்த 10 நாட்களுக்கு மேலாக அங்குள்ள மக்களைப் பாடாய் படுத்தி வருகிறது.
வடக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது ஹவாய்.. தீவுக்கூட்டமான ஹவாய் அமெரிக்காவில் இருந்து 3700 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது 1959இல் 50ஆவது மாகாணமாக அமெரிக்காவில் தன்னை இணைத்துக் கொண்டது.

பல அழகிய மலைகள், கடற்கரைகளைக் கொண்ட ஹவாய்க்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் செல்வார்கள். கொரோனா காலத்தில் சுற்றுலா துறை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், இப்போது தான் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்தது.
காட்டுத்தீ: இதற்கிடையே இப்போது ஹவாய் தீவுக் கூட்டத்திற்குப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கிய இந்த தீ 10 நாட்களுக்குத் தொடர்ந்து எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீ ஹவாய் தீவுக்கு மக்களுக்குப் பேரழிவாக அமைந்துள்ளது. இந்த பேரழிவால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் முகாம்களுக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அங்குள்ள லஹைனா என்ற பகுதியில் ஏற்பட்ட தீயில் சுமார் 85%ஐ தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்திவிட்டனர். அதேநேரம் அங்கு மௌய்யில் தொடர்ந்து எரியும் தீயைக் கட்டுப்படுத்த அவர்கள் போராடி வருகின்றனர். மௌய் மாகாணத்தில் ஏற்பட்ட தீயால் இதுவரை மொத்தம் 2,170 ஏக்கர் மரங்கள் எரிந்து சம்பலாக்கியுள்ளது.. குலாவில் ஏற்பட்ட தீயில் 75% கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அங்கும் 678 ஏக்கர் நிலவும் தீயால் எரிந்து நாசமாகியுள்ளது.
என்ன காரணம்: சூறாவளிக் காற்றுடன் கூடிய அசாதாரண வறண்ட வானிலையே தீக்கு எரிபொருளாக மாறி அது வேகமாகப் பரவ காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கிய இந்த காட்டுத் தீ 2,000க்கும் மேற்பட்ட கட்டிடங்களை அழித்துள்ளது. மேலும் இந்த தீவிபத்தில் பல்வேறு சிறப்புமிக்க பல இடங்களும் எரிந்து நாசமாகியுள்ளது.

பேரழிவை ஏற்படுத்தியுள்ள இந்த தீ விபத்திற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.. இருப்பினும், ஏற்கனவே வறண்ட வானிலை மற்றும் அதீத காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தீ வேகமாகப் பரவ இதுவே காரணமாக அமைந்துவிட்டது. அமெரிக்காவில் ஏற்படும் காட்டுத்தீயில் சுமார் 85% மனிதர்களால் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும், உள்ளூர் மரங்களைக் காட்டிலும் வெளியில் இருந்து கொண்டு வரப்படும் மரங்கள் எளிதாகத் தீப்பற்றக் கூடியவையாக இருக்கிறது. இந்த இரண்டும் சேர்த்துத் தான் தீ இந்தளவுக்கு வேகமாகப் பரவ காரணமாக அமைந்துவிட்டது.
சைரன்: ஹவாய் பகுதியில் இயற்கை பேரிடர் ஏற்படும் போது மக்களை எச்சரிக்கும் வகையில் அலர்ட் செய்யும் சைரன் முறை இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 8இல் காட்டுத்தீ தொடங்கிய போதும், அதன் பிறகு இது வேகமாகப் பரவிய சமயத்திலும் இந்த சைரன் ஒலிக்கவில்லையாம், இது இந்த சைரனின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், காட்டுத்தீயை அணைக்கவும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications