இப்படிதான் கொரோனா பரவுகிறது.. ஜாக்கிரதையா இருங்க.. உலக சுகாதார மையம் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
ஜெனீவா: உலகில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு புதிய கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
Recommended Video
கடந்த 2019இல் கண்டறியப்பட்ட கொரோனா, தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. ஓர் ஆண்டை கடந்தும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவல் குறைந்ததாகத் தெரிவில்லை.
கொரோனாவைக் கட்டுப்படுத்த முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக வேகமாகத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும்கூட இந்த கொரோனா பற்றி நாம் இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ள வில்லை.

உலக சுகாதார அமைப்பு
கொரோனா பரவ தொடங்கிய போது, உலக சுகாதார அமைப்பு, இந்த வைரஸ் காற்றில் பரவ வாய்ப்பில்லை என்றே தெரிவித்தது. கொரோனா பாதித்தவர்கள் மட்டும் மாஸ்க்குகளை அணிந்தால் போதும் என்றும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டிருந்து. காற்றின் மூலம் கொரோனா பரவ வாய்ப்பில்லை என்றே உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கூறி வந்தது.

காற்றில் பரவும் கொரோனா
இது தொடர்பாக உலகெங்கும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கொரோனா காற்றின் மூலம் பரவுவது உறுதியானது. இதையடுத்து உலக சுகாதார அமைப்பு தற்போது தனது வழிகாட்டுதல்களை மாற்றியுள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில், கொரோனா பரவல் என்பது 1 மீட்டருக்குள் இருப்பவர்களுக்கு மத்தியில் எளிதாகப் பரவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Array
கொரோனா வைரசை கொண்டிருக்கும் துளிகள் ஒருவரது கண், மூக்கு அல்லது வாய் வழியே மற்றொருவர் உடலில் நுழையும்போது கொரோனா பரவுகிறது. மோசமான காற்றோட்டம் கொண்ட அல்லது நெரிசல் அதிகம் உள்ள அறைகளில் இந்த வைரஸ் வேகமாகப் பரவக்கூடும், அதேபோல கொரோனா வைரஸ் இருக்கும் இடத்தை தொட்டு, பின்னர் அதே கைகளைச் சுத்தப்படுத்தாமல் கண், மூக்கு, அல்லது வாயில் ஒருவர் கை வைத்தால் கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

காற்றில் பரவும் கொரோனா
கொரோனா வைரஸ் 1 மீட்டாரைத் தாண்டியும் காற்றின் அதிக தூரம் மிதந்து கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், உலகின் சில பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வகைகள், மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவுவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து உறுதியான முடிவுகள் இல்லை. எனவே இது தொடர்பாகக் கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications