4 வது மாடி ஜன்னலில் தலை சிக்கியபடி தொங்கிய 4வயது சிறுவன்.. எப்படி மீட்கப்பட்டான் என்பதை பாருங்க!
பெய்ஜிங்: சீனாவில் 4வது மாடியின் வெளியே ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் உயிருக்கு போராடிய 4 வயது சிறுவனை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சீனா முழுவதும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
கிழக்கு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் உள்ள லினி நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4வயது சிறுவன் தனது தாத்தா மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறான். கடந்த திங்கள்கிழமை அன்று அவனது பெற்றோர் வீட்டில் இல்லை. தாத்தா மட்டுமே வீட்டில் இருந்தார்.

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வீட்டின் ஜன்னலில் ஏறினான். அப்போது எதிர்பாராதவிதமாக வெளியே அவன் விழுந்தான் அவனது தலை ஜன்னலின் வெளியே பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த கம்பிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டது. 4வது மாடியில் இருந்து 4வயது சிறுவன் தலை சிக்கிய நிலையில் கதறி அழுதபடி உயிருக்கு போராடினான்.
இதைபார்த்த சிறுவனின் தாத்தா உடனடியாக தீயணப்பு வீரர்களை உதவிக்கு அழைத்தார். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள். குழந்தையை மீட்பதற்கு ஏதுவாக அவனது மார்பில் கயிறு கட்டினர். தவறி கீழே விழுந்தால் காயமின்றி பிடிப்பதற்கு ஏதுவாக பாதுகாப்பான மெத்தை போன்ற அமைப்பை கீழே கட்டிவிட்டனர். இது ஒருபுறம் எனில் ஹைட்ராலிக் ஸ்பிரட்டர் மூலம் உலோக கம்பிகளை வளைத்து அகலப்படுத்தி சிறுவனை வெற்றிகரமாக வெளியே தூக்கினர்.
இப்படி பத்திரமாக தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்ட சிறுவன் தற்போது நலமுடன் உள்ளான். 4வது மாடியில் தொங்கிய சிறுவனை மீட்கும் வீடியோ காட்சிகள் சீனாவின் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications