சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து பலியான ஹைதராபாத் என்ஜினியரிங் மாணவர்!!
டமாஸ்கஸ்: சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்த ஹைதராபாத் என்ஜினியரிங் மாணவர் ஹனீப் வாசீம் தாக்குதல் ஒன்றில் உயிரிழந்ததாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர் ஹனீப் வாசீம் நவம்பர் 2014-ம் ஆண்டு மேல்படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போரிட்டுஉள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட அதன் நேச நாடுகள் நடத்திய தாக்குதலில் கடந்த மார்ச்-15ந் தேதி வாசீம் உயிரிழந்தார் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியான தீவிரவாதி அடிலாபாத்தில் உள்ள சாதான் கல்லூரில் பட்டப்படிப்பு முடித்துஉள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தனது சகோதரியின் திருமணத்திற்கு கடைசியாக இந்தியா வந்துஉள்ளார்.
அத்துடன் கரீம்நகரைச் சேர்ந்த மற்றொரு இளைஞரையும் வாசீம் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது, அவரை தேடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து பின்னர் மத்திய அரசால் மீட்கப்பட்ட நிலையில் ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்த இளைஞர்களும் அந்த இயக்கத்தில் இணைந்திருப்பது உளவுத்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications