உங்கள் செல்போனில் 'சார்ஜ்' இல்லாவிட்டால் அமெரிக்காவுக்குள் கொண்டு செல்ல முடியாது
நியூயார்க்: சார்ஜ் இல்லாத செல்போன்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று அமெரிக்க விமான நிலைய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் குண்டு தயாரிக்கும் நபர் விமான நிலைய ஸ்கேனர்களில் சிக்காத வகையில் வெடிகுண்டை தயாரித்து வருவதை அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ அண்மையில் கண்டுபிடித்தது.
இதையடுத்து அமெரிக்க விமான நிலையங்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

போன்
சார்ஜ் போடாத செல்போன்கள், லேப்டாப்களை விமானங்களில் எடுத்துச் செல்ல அமெரிக்கா தடை விதித்துள்ளது.

வெடிகுண்டு
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் செல்போன்களில் சார்ஜ் உள்ளதா என்று விமான நிலைய அதிகாரிகள் பரிசோதனை செய்வார்கள். சார்ஜ் இல்லாத போன்கள் வெடிகுண்டுகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இங்கிலாந்து
இங்கிலாந்தின் ஹீத்ரூ, மான்செஸ்ட்ர் மற்றும் கேட்விக்கில் இருந்து அமெரிக்கா கிளம்பும் பயணிகள் விமானத்தில் ஏறும் முன்பு அவர்களின் செல்போனில் சார்ஜ் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்படும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.

அனுமதி மறுப்பு
யாராவது செல்போனில் சார்ஜ் இல்லாமல் வைத்திருந்தால் அவர்கள் அமெரிக்காவுக்கு விமானம் மூலம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தாக்குதல்
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுவதால் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள 100 விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அமெரிக்கா கடந்த வாரம் கேட்டுக் கொண்டுள்ளது.

தீவிரவாதி
அல் கொய்தா அமைப்பின் இப்ராஹிம் அல் அசிரி தயாரித்த குண்டுகள் மெட்டல் டிடெக்டர்கள், பாடி ஸ்கேனர்களில் சிக்காத அளவுக்கு அவை கச்சிதமாக செய்யப்பட்டுள்ளதாக சிஐஏ அதிகாரிகள் நம்புகிறார்கள்.

ஏமன்
ஏமனில் உள்ள அல் கொய்தா அமைப்பில் நூற்றுக்கணக்கான இங்கிலாந்து குடிமகன்கள் உள்ளனர். அதனால் தான் இங்கிலாந்தில் இருந்து கிளம்பும் பயணிகளுக்கு இந்த புதிய கட்டுப்பாடு ஆகும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications