For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ள உறவில் ஈடுபட்ட விதவைக்கும், காதலனுக்கும் 9 சவுக்கடிகள்

Google Oneindia Tamil News

லாங்சா: இந்தோனேஷியாவின் அருகில் உள்ள லாங்சாவில் கிட்டதட்ட ஒரு விதவைப் பெண்ணை 8 க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து, சவுக்கால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாங்சாவில் 8 பேர் கொண்ட பலாத்கார கும்பல் ஒரு வீட்டுக்குள் நுழைந்தது.

அப்போது அவ்வீட்டுக்குள் திருமணமான ஆண் ஒருவரும், விதவை பெண் ஒருவரும் கள்ள உறவில் ஈடுபட்டதை அவர்கள் கண்டனர்.

கண்முன்னே பலாத்காரம்:

பலாத்கார கும்பலை சேர்ந்தவர்கள் உடனே அந்த ஆண் மகனை கட்டிப்போட்டு தாக்கியதுடன் அவன் கண் முன்னாலேயே அப்பெண்ணை அவர்கள் 8 பேரும் ஒவ்வொருவராக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

போலீசில் ஒப்படைப்பு:

பின்னர் அவர்களே அப்பெண்ணை காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

3 பேர் கைது:

அப்பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீசார் பலாத்கார கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.பலாத்காரத்தில் ஈடுபட்ட அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 பிரம்படி:

மேலும் திருமணமான ஆணுடன் உறவு வைத்துக்கொண்டுள்ளதால் அவர்களின் ஷரியத் சட்டப்படி அப்பெண்ணுக்கும், அவளது காதலனுக்கும், பொதுமக்கள் முன்னிலையில் 9 சவுக்கடிகள் கொடுக்கப்பட்டது.

English summary
Langsa widow and her illegal lover got 9 whiplashes for their illegal relationship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X