கள்ள உறவில் ஈடுபட்ட விதவைக்கும், காதலனுக்கும் 9 சவுக்கடிகள்
லாங்சா: இந்தோனேஷியாவின் அருகில் உள்ள லாங்சாவில் கிட்டதட்ட ஒரு விதவைப் பெண்ணை 8 க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து, சவுக்கால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாங்சாவில் 8 பேர் கொண்ட பலாத்கார கும்பல் ஒரு வீட்டுக்குள் நுழைந்தது.
அப்போது அவ்வீட்டுக்குள் திருமணமான ஆண் ஒருவரும், விதவை பெண் ஒருவரும் கள்ள உறவில் ஈடுபட்டதை அவர்கள் கண்டனர்.
கண்முன்னே பலாத்காரம்:
பலாத்கார கும்பலை சேர்ந்தவர்கள் உடனே அந்த ஆண் மகனை கட்டிப்போட்டு தாக்கியதுடன் அவன் கண் முன்னாலேயே அப்பெண்ணை அவர்கள் 8 பேரும் ஒவ்வொருவராக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
போலீசில் ஒப்படைப்பு:
பின்னர் அவர்களே அப்பெண்ணை காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
3 பேர் கைது:
அப்பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீசார் பலாத்கார கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.பலாத்காரத்தில் ஈடுபட்ட அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 பிரம்படி:
மேலும் திருமணமான ஆணுடன் உறவு வைத்துக்கொண்டுள்ளதால் அவர்களின் ஷரியத் சட்டப்படி அப்பெண்ணுக்கும், அவளது காதலனுக்கும், பொதுமக்கள் முன்னிலையில் 9 சவுக்கடிகள் கொடுக்கப்பட்டது.