"புது பாகிஸ்தானை" உருவாக்கி அதன் பிறகு கல்யாணம் செய்யப் போகிறாராம் இம்ரான் கான்!
இஸ்லாமாபாத்: நான் கனவு காணும் பாகிஸ்தான் உருவான பின்னர் மறு திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளேன் என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.
இம்ரான் கான் தான் இப்போது பாகிஸ்தானின் ரொம்பப் பிசி அரசியல்வாதியாக இருக்கிறார். ஆயிரக்கணக்கானோரைத் திரட்டி இஸ்லாமாபாத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகிறார் இம்ரான்.
இவருக்கு ராணுவம் மறைமுகமாக ஆதரவு தருவதாக கூறப்படுகிறது. இதனால் இம்ரான் மீது கை வைக்க பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் தயக்கம் காட்டுகிறார்.
இந்திலையில் தனது மறுமணம் குறித்துப் பேசியுள்ளார் இம்ரான் கான்.

புது பாகிஸ்தான் உருவாகட்டும்
நேற்று இரவு போராட்டக்காரர்கள் மத்தியில் இம்ரான் கான் பேசுகையில், எனது மனதில் ஒரு பாகிஸ்தான் உள்ளது. அந்தக் கனவு பாகிஸ்தான், புதிய பாகிஸ்தான் உருவாக வேண்டும் என்றுதான் உழைத்து வருகிறேன்.

எனக்காக மட்டுமல்ல, உங்களுக்காகவும்தான்
எனக்காக மட்டுமல்ல, உங்களுக்காகவும்தான் அந்தப் புதிய பாகிஸ்தான் குறித்த கனவில் உள்ளேன். அது நிறைவேறினால், புதிய பாகிஸ்தான் உருவாகினால், அதன் பின்னர் நான் மறுமணம் செய்து கொள்வேன் என்றார் இம்ரான் கான்.

கல்யாணம் புதுசல்ல
இம்ரான் கான் கனவு காணும் பாகிஸ்தான் தான் புதியது. ஆனால் அவருக்குக் கல்யாணம் புதிதல்ல. 1995ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெமீமா கோல்ட்ஸ்மித்தை திருமணம் செய்தார். 2004ல்இருவரும் பிரிந்தனர். இத்தம்பதிக்கு சுலைமான் மற்றும் குவாசிம் என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் தந்தையுடன் இல்லை. மாறாக தாயுடன் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர்.

நிறைக் காதல்கள்...
கிரிக்கெட் கேப்டனாக, வீரராக ஜொலித்தபோது நிறையக் காதல்களிலும் சிக்கியவர் இம்ரான். ஆனால் ஜெமீமாவை விட்டுப் பிரிந்த பிறகு திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில், மீண்டும் ஒரு திருமணம் குறித்த பேச்சை அவரே தொடங்கியுள்ளார்.

பொண்ணு ரெடியோ??
ஒரு வேளை இம்ரான் தான் மணக்கப் போகும் பெண்ணை மனதுக்குள் ஏற்கனவே வரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications