சீனா சுற்றுலா பயணிகளுக்கு இ-விசாக்கள்: பிரதமர் மோடி அறிவிப்பு! பாதுகாப்பு அமைப்புகள் கடும் எதிர்ப்பு
பெய்ஜிங்: சீனா சுற்றுலா பயணிகளுக்கு இ-விசாக்களை அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. இதன் மூலம் இ-விசாக்களை பெறும் 77-வது நாடாகியுள்ளது சீனா. ஆனால் இந்த அறிவிப்பு இந்திய பாதுகாப்பு அமைப்புகளின் கடும் எச்சரிக்கையை மீறி வெளியிடப்பட்டுள்ளதால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
சீனா சுற்றுப்பயணத்தின் 2வது நாளான நேற்று பிரதமர் மோடி அங்குள்ள சின்குவா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் உரையாடினார். அப்போது, சீன குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இ- சுற்றுலா விசாக்களை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக மோடி தெரிவித்தார்.

இ-விசா முறையில் ஒருவர் இந்தியாவுக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஆன்லைனில் விண்ணபிக்க வேண்டும். அதனடிப்படையில் இந்தியா வந்து சேர்ந்த பின்னர் அவருக்கு இ-விசா வழங்கப்படும்.
ஆனால் சீனாவுக்கு இ-விசாக்களை நீட்டிக்கும் முடிவுக்கு இந்திய பாதுகாப்புத் துறை சார்ந்த அமைப்புகள் ஒப்புதல் தரவில்லை. இதுபோன்ற விசாக்களை தவறாக பயன்படுத்தி பிற நாடுகள் இந்தியாவை உளவு பார்க்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன.












Click it and Unblock the Notifications