ஆப்கனில் 8 மாதப் போராட்டத்துக்குப் பின் மீண்டு வந்த அலெக்சிஸ் பிரேம்குமார்...!

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையை சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் ஆப்கானிஸ்தானில், ஜே.ஆர்.எஸ். தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஹெராத் மாகாணத்தில் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார் .

ஜெயலலிதா கடிதம்

ஜெயலலிதா கடிதம்

ஜூன் 4: பாதிரியாரை பத்திரமாக மீட்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

அலெக்சிஸ் பிரேம்குமாரை பாதுகாப்பாக மீட்டுத் தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

மீட்க முயற்சி

மீட்க முயற்சி

ஜூன் 5: இதைத் தொடர்ந்து பாதிரியாரை மீட்க ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

மூவர் கைது

மூவர் கைது

ஜூன் 5: பாதிரியார் கடத்தப்பட்டு, 4 நாட்களுக்குப் பிறகு, அவரது கடத்தல் தொடர்பாக தாலிபான் உறுப்பினர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனிமொழி கேள்வி

கனிமொழி கேள்வி

ஆகஸ்ட் 5: தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டு 2 மாதங்கள் ஆன நிலையில், அவரை மீட்க அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்து ராஜ்யசபாவில் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார்.

பல கட்ட முயற்சி

பல கட்ட முயற்சி

இதற்கு பதிலளித்துப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வரராஜ் தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க அனைத்துவித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் சுஸ்மா தெரிவித்தார்.

8 மாதங்களுக்குப் பின்ன

8 மாதங்களுக்குப் பின்ன

எட்டு மாதங்களாக அவரை மீட்க காபூலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், ஆப்கன் அரசுடன் இணைந்து பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து நேற்று அவர் விடுதலை செய்யப்பட்டார்.

குடும்பத்தினர் நன்றி:

குடும்பத்தினர் நன்றி:

டெல்லி வந்த பிரேம்குமாரை வரவேற்க, அவரது உறவினர்கள் 3 பேர் விமானம் மூலம் சென்னையிலிருந்து டெல்லி சென்றனர். தனது மகனை மீட்க நடவடிக்கை எடுத்த மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+