யு.எஸ். டெக்ஸாஸ் மாகாண அரசு செயலாளராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் அரசு செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நந்திதா பெர்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அம் மாகாண ஆளுநர் ரிக்கி பெர்ரி பிறபித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை படித்தவர் நந்திதா பெர்ரி. டெக்ஸாஸ் மாகாணத்தின் தலைமை வழக்கறிஞராக நந்திதா பெர்ரி பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் டெக்ஸாஸ் மாகாணத்தின் அரசு செயலாளராக நந்திதா பெர்ரியை நியமித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வரும் ஜனவரி 7-ந் தேதி நந்திதா அப்பதவியை ஏற்கவுள்ளார்.
அமெரிக்காவின் தெற்கு மாகாணத்தில் மிக உயர்ந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நந்திதா பெர்ரி ஆவார்.












Click it and Unblock the Notifications