அமெரிக்க மருத்துவ துறை தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் பொறுப்பேற்பு
வாஷிங்டன்: 37 வயது இந்திய அமெரிக்கரான விவேக் மூர்த்தி அமெரிக்க மருத்துவத் துறை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய வம்சாவளியினருக்கு தனது அரசில் உயர் பதவிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்திய-அமெரிக்கரான விவேக் மூர்த்தி(37) அமெரிக்க மருத்துவத் துறை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு துணை அதிபர் ஜோ பிடென் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
விவேக் பகவத் கீதையை சாட்சியாக வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த பதவியை வகிக்கும் இளம் நபர் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விவேக் கூறுகையில்,
மருத்துவத் துறை தலைவராக பொற்றுப்பேற்றதில் மகிழ்ச்சியாக உள்ளது. என் பொறுப்புகள் அதிகரித்துள்ளது. இந்த பதவியை எனக்கு அளித்த அதிபர் ஒபாமாவுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் தந்தை இந்தியாவில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்த விவசாயியின் மகன். என் தாத்தா தனது மகனிற்கு கல்வி அளிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். கடன் வாங்கியாவது மகனை படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். என் தாத்தாவால் தான் நாங்கள் அமெரிக்காவில் உள்ளோம். இல்லை என்றால் கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்திருப்போம் என்றார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பை முடித்த விவேக் ஏல் பலைகலைழக்கழகத்தில் மருத்துவ படிப்பும், எம்.பி.ஏ.வும் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications