பக்கத்து சீட்டில் தூங்கிய பெண்ணிடம் அசிங்கமான சில்மிஷம்.. அமெரிக்காவில் ஆந்திராக்காரர் கைது!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலிருந்து நியூயார்க் நகருக்கு வந்து கொண்டிருந்த விர்ஜின் அமெரி்க்கா விமானத்தில் தனது பக்கத்து சீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கையை விட்டு சில்மிஷம் செய்த இந்தியர் கைது செய்யப்பட்டார்.

அந்த நபர் தனது ஆணுறுப்பை வெளியில் விட்டுக் கொண்டு சேட்டை செய்ததாகவும், அந்தப் பெண்ணின் காலோடு கால் வைத்து உரசியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

Indian arrested for groping woman passenger in US flight

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் தன்னுடன் பயணித்த தனது காதலரிடம் புகார் கூறினார். அவர் உடனடியாக விமான ஊழியர்களிடம் புகார் கூறினார். இதைத் தொடர்ந்து அந்த இந்தியரை தனி இருக்கைக்கு மாற்றினர் விமான ஊழியர்கள். அவர் சீட்டை விட்டு நகரவும் தடை விதிக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும் அந்த நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் வீரபரத்தி ராவ் என்றும் விசாகப்பட்டனத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இவருக்கு வயது 58 ஆகும். கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 50,000 டாலர் பெயிலில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 2.50 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+